News8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை - இப்போது எங்கிருக்கிறார்கள்?

8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை – இப்போது எங்கிருக்கிறார்கள்?

-

உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனைத் தொட்டுவிட்டது என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு அது 7 பில்லியனை எட்டியிருந்தது.

உலக மக்கள்தொகை 9 பில்லியனை எட்ட இன்னும் 15 ஆண்டுகள் எடுக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டது. அது 2080ஆம் ஆண்டுக்கு முன்பு 10 பில்லியனை எட்டும் சாத்தியம் இல்லை என்று நிறுவனம் கருதுகிறது.

5 பில்லியனாவது, 6 பில்லியனாவது, 7 பில்லியனாவது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?

உலக மக்கள்தொகை அந்த எண்ணிக்கையை எட்டும்போது அதைப் பிரதிபலிக்க நிறுவனம் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

5 பில்லியனாவது குழந்தை…

1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாதேஜ் காஸ்பர் (Matej Gaspar) இப்போதைய குரோஷியாவின் தலைநகர் ஸாக்ரெபில் பிறந்தார்.

இந்த ஆண்டு அவருக்கு 35 வயது. அவர் ஸாக்ரெப் நகரில் வாழ்ந்துகொண்டிருப்பதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

6 பில்லியனாவது குழந்தை…

1999ஆம் ஆண்டு அட்னான் மெவிச் (Adnan Mevic) போஸ்னியா – ஹெர்ஸகோவினாவில் பிறந்தார்.

அவருக்கு இப்போது 23 வயது.

23 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 2 பில்லியன் அதிகரித்துவிட்டது என்று அவர் வியப்படைந்தார்.

இந்த அழகிய பூமி எப்படித் தாக்குப்பிடிக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்று அவர் BBCயிடம் கூறினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...