News8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை - இப்போது எங்கிருக்கிறார்கள்?

8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை – இப்போது எங்கிருக்கிறார்கள்?

-

உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனைத் தொட்டுவிட்டது என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு அது 7 பில்லியனை எட்டியிருந்தது.

உலக மக்கள்தொகை 9 பில்லியனை எட்ட இன்னும் 15 ஆண்டுகள் எடுக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டது. அது 2080ஆம் ஆண்டுக்கு முன்பு 10 பில்லியனை எட்டும் சாத்தியம் இல்லை என்று நிறுவனம் கருதுகிறது.

5 பில்லியனாவது, 6 பில்லியனாவது, 7 பில்லியனாவது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?

உலக மக்கள்தொகை அந்த எண்ணிக்கையை எட்டும்போது அதைப் பிரதிபலிக்க நிறுவனம் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

5 பில்லியனாவது குழந்தை…

1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாதேஜ் காஸ்பர் (Matej Gaspar) இப்போதைய குரோஷியாவின் தலைநகர் ஸாக்ரெபில் பிறந்தார்.

இந்த ஆண்டு அவருக்கு 35 வயது. அவர் ஸாக்ரெப் நகரில் வாழ்ந்துகொண்டிருப்பதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

6 பில்லியனாவது குழந்தை…

1999ஆம் ஆண்டு அட்னான் மெவிச் (Adnan Mevic) போஸ்னியா – ஹெர்ஸகோவினாவில் பிறந்தார்.

அவருக்கு இப்போது 23 வயது.

23 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 2 பில்லியன் அதிகரித்துவிட்டது என்று அவர் வியப்படைந்தார்.

இந்த அழகிய பூமி எப்படித் தாக்குப்பிடிக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்று அவர் BBCயிடம் கூறினார்.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...