News8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை - இப்போது எங்கிருக்கிறார்கள்?

8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை – இப்போது எங்கிருக்கிறார்கள்?

-

உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனைத் தொட்டுவிட்டது என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு அது 7 பில்லியனை எட்டியிருந்தது.

உலக மக்கள்தொகை 9 பில்லியனை எட்ட இன்னும் 15 ஆண்டுகள் எடுக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டது. அது 2080ஆம் ஆண்டுக்கு முன்பு 10 பில்லியனை எட்டும் சாத்தியம் இல்லை என்று நிறுவனம் கருதுகிறது.

5 பில்லியனாவது, 6 பில்லியனாவது, 7 பில்லியனாவது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?

உலக மக்கள்தொகை அந்த எண்ணிக்கையை எட்டும்போது அதைப் பிரதிபலிக்க நிறுவனம் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

5 பில்லியனாவது குழந்தை…

1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாதேஜ் காஸ்பர் (Matej Gaspar) இப்போதைய குரோஷியாவின் தலைநகர் ஸாக்ரெபில் பிறந்தார்.

இந்த ஆண்டு அவருக்கு 35 வயது. அவர் ஸாக்ரெப் நகரில் வாழ்ந்துகொண்டிருப்பதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

6 பில்லியனாவது குழந்தை…

1999ஆம் ஆண்டு அட்னான் மெவிச் (Adnan Mevic) போஸ்னியா – ஹெர்ஸகோவினாவில் பிறந்தார்.

அவருக்கு இப்போது 23 வயது.

23 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 2 பில்லியன் அதிகரித்துவிட்டது என்று அவர் வியப்படைந்தார்.

இந்த அழகிய பூமி எப்படித் தாக்குப்பிடிக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்று அவர் BBCயிடம் கூறினார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...