News8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை - இப்போது எங்கிருக்கிறார்கள்?

8 பில்லியனைத் தொட்டது உலக மக்கள் தொகை – இப்போது எங்கிருக்கிறார்கள்?

-

உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனைத் தொட்டுவிட்டது என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு அது 7 பில்லியனை எட்டியிருந்தது.

உலக மக்கள்தொகை 9 பில்லியனை எட்ட இன்னும் 15 ஆண்டுகள் எடுக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டது. அது 2080ஆம் ஆண்டுக்கு முன்பு 10 பில்லியனை எட்டும் சாத்தியம் இல்லை என்று நிறுவனம் கருதுகிறது.

5 பில்லியனாவது, 6 பில்லியனாவது, 7 பில்லியனாவது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?

உலக மக்கள்தொகை அந்த எண்ணிக்கையை எட்டும்போது அதைப் பிரதிபலிக்க நிறுவனம் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

5 பில்லியனாவது குழந்தை…

1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாதேஜ் காஸ்பர் (Matej Gaspar) இப்போதைய குரோஷியாவின் தலைநகர் ஸாக்ரெபில் பிறந்தார்.

இந்த ஆண்டு அவருக்கு 35 வயது. அவர் ஸாக்ரெப் நகரில் வாழ்ந்துகொண்டிருப்பதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

6 பில்லியனாவது குழந்தை…

1999ஆம் ஆண்டு அட்னான் மெவிச் (Adnan Mevic) போஸ்னியா – ஹெர்ஸகோவினாவில் பிறந்தார்.

அவருக்கு இப்போது 23 வயது.

23 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 2 பில்லியன் அதிகரித்துவிட்டது என்று அவர் வியப்படைந்தார்.

இந்த அழகிய பூமி எப்படித் தாக்குப்பிடிக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்று அவர் BBCயிடம் கூறினார்.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...