Melbourneமெல்பேர்ணுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

மெல்பேர்ணுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

-

சிங்கப்பூரிலிருந்து மெல்பேர்ண் நகருக்குத் திரும்பிய 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கடந்த திங்கட்கிழமை (14 நவம்பர்) Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது

பாதிக்கப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்குத் தட்டம்மை இருந்தது பயணத்தின்போதே தெரிய வந்தது என்றும் அவர்கள் உடனடியாக மருத்துவரை நாடினர் என்றும் அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த விமானமும் மெல்பேர்ண் விமான நிலையமும் நோய் பரவக்கூடிய தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

QF36 விமானத்தில் பயணம் செய்தவர்கள், நவம்பர் 15ஆம் திகதி காலை 6:10 மணி முதல் 8:40 மணி வரை மெல்பேர்ண் விமான நிலையத்தின் அனைத்துலக வருகைப் பகுதியில் இருந்தவர்கள் ஆகியோர் டிசம்பர் 3ஆம் திகதி வரை தங்கள் உடல்நலத்தைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தட்டம்மை நெருங்கிய தொடர்பில் எளிதில் பரவக்கூடியது. குறிப்பாகத் தட்டம்மைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கிடையே அது அதிகமாகப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவர்களுக்கும் பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்திகொண்ட பெரியவர்களுக்கும் தட்டம்மை ஏற்படும் அபாயம் அதிகம்.

இவ்வாண்டு விக்டோரியாவில் 5 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...