Uncategorizedமெல்பர்னுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

மெல்பர்னுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

-

சிங்கப்பூரிலிருந்து மெல்பர்ன் நகருக்குத் திரும்பிய 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கடந்த திங்கட்கிழமை (14 நவம்பர்) Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது

பாதிக்கப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்குத் தட்டம்மை இருந்தது பயணத்தின்போதே தெரிய வந்தது என்றும் அவர்கள் உடனடியாக மருத்துவரை நாடினர் என்றும் அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த விமானமும் மெல்பர்ன் விமான நிலையமும் நோய் பரவக்கூடிய தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

QF36 விமானத்தில் பயணம் செய்தவர்கள், நவம்பர் 15ஆம் திகதி காலை 6:10 மணி முதல் 8:40 மணி வரை மெல்பர்ன் விமான நிலையத்தின் அனைத்துலக வருகைப் பகுதியில் இருந்தவர்கள் ஆகியோர் டிசம்பர் 3ஆம் திகதி வரை தங்கள் உடல்நலத்தைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தட்டம்மை நெருங்கிய தொடர்பில் எளிதில் பரவக்கூடியது. குறிப்பாகத் தட்டம்மைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கிடையே அது அதிகமாகப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவர்களுக்கும் பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்திகொண்ட பெரியவர்களுக்கும் தட்டம்மை ஏற்படும் அபாயம் அதிகம்.

இவ்வாண்டு விக்டோரியாவில் 5 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

Latest news

RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இணைந்துள்ள இலங்கை பொறியாளர்

அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் நிறுவனங்களின் சர்வதேச பல்கலைக்கழகம் RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இலங்கை பொறியாளர் ஒருவரும் இணைந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பொறியாளர்கள் குழுவின்...

மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ள விண்கலம்

பல மாதங்களாக செயல்படாமல் இருந்த Voyager-1 விண்கலம் மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து படிக்கக்கூடிய தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. Voyager-1 ஆய்வு பல மாதங்களாக செயலிழந்த பிறகு...

உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் இடம்பிடித்துள்ள இலங்கைப் பெண்

டைம்ஸ் சஞ்சிகையால் பெயரிடப்பட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் இலங்கைப் பெண்ணான ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் சமற்கிருத சமூகத்திற்காக உரத்த...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா ஐஸ் போதைப்பொருளுக்கு உலகில் அதிக லாபம் ஈட்டும் சந்தையாகக் கருதப்படுவதோடு, பனிக்கட்டிகளுக்கு மேலதிகமாக,...

தடைசெய்யப்பட்ட சிட்னி கேசினோ கிளப்பிற்கு பச்சை விளக்கு

தடை செய்யப்பட்ட கிரவுன் கேசினோ கிளப் மீண்டும் திறக்கப்படுவதற்கு சில சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் சூதாட்ட விடுதியாக...

ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களுக்கு வேலை தேடுவதற்கான வழிகாட்டி

அவுஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டின் வேலைச் சந்தையில் புதிய வேலைவாய்ப்பை விரைவாகக் கண்டறிய தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பல வேலை வாய்ப்புகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை,...