Melbourneமெல்பேர்ணுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

மெல்பேர்ணுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

-

சிங்கப்பூரிலிருந்து மெல்பேர்ண் நகருக்குத் திரும்பிய 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கடந்த திங்கட்கிழமை (14 நவம்பர்) Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது

பாதிக்கப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்குத் தட்டம்மை இருந்தது பயணத்தின்போதே தெரிய வந்தது என்றும் அவர்கள் உடனடியாக மருத்துவரை நாடினர் என்றும் அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த விமானமும் மெல்பேர்ண் விமான நிலையமும் நோய் பரவக்கூடிய தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

QF36 விமானத்தில் பயணம் செய்தவர்கள், நவம்பர் 15ஆம் திகதி காலை 6:10 மணி முதல் 8:40 மணி வரை மெல்பேர்ண் விமான நிலையத்தின் அனைத்துலக வருகைப் பகுதியில் இருந்தவர்கள் ஆகியோர் டிசம்பர் 3ஆம் திகதி வரை தங்கள் உடல்நலத்தைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தட்டம்மை நெருங்கிய தொடர்பில் எளிதில் பரவக்கூடியது. குறிப்பாகத் தட்டம்மைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கிடையே அது அதிகமாகப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவர்களுக்கும் பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்திகொண்ட பெரியவர்களுக்கும் தட்டம்மை ஏற்படும் அபாயம் அதிகம்.

இவ்வாண்டு விக்டோரியாவில் 5 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

Latest news

Smart சாதனங்களுக்கு புதிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்

Consumer-grade, Smart சாதனங்களுக்கு லேபிளிங் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் தயாராகி வருகிறது. Smart சாதனங்களுக்கான புதிய லேபிளிங் திட்டம், மக்கள் வீட்டில் பயன்படுத்தும் சாதனங்களின் சைபர்...

அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளிகளில் ஒன்றின் மீது டிரம்ப் விதித்த வரிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 30 சதவீத வரியை அறிவித்தார். இது...

ஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G,...

NSW-ல் வேட்டையாடச் சென்றபோது காலில் சுடப்பட்ட 9 வயது சிறுவன்

வேட்டையாடும் பயணத்தின் போது சுடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தொலைதூர NSW இல் உள்ள Bourke-இல் இருந்து வடக்கே...

ஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G,...

NSW-ல் வேட்டையாடச் சென்றபோது காலில் சுடப்பட்ட 9 வயது சிறுவன்

வேட்டையாடும் பயணத்தின் போது சுடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தொலைதூர NSW இல் உள்ள Bourke-இல் இருந்து வடக்கே...