Newsஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டம்

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டம்

-

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது.

COVID-19 நோய்த்தொற்றின்போது தற்காலிக விசா வைத்திருந்தவர்கள் பலர் நாட்டிலிருந்து வெளியேறினர்.

அதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தேடச் சிரமப்படுகின்றன.

உணவகங்கள், மதுபானக் கூடங்கள், ஹோட்டல்கள் ஆகியவை அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக அந்நாட்டின் உபசரிப்புத் துறையில் வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

விசா நடைமுறையை விரிவுபடுத்த அரசாங்கம் முயற்சி செய்துவந்தாலும் பாதிக்கப்பட்ட வேலையிடங்கள் மீண்டு வருவதற்குப் பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

மாணவர்கள், சுற்றுப்பயணிகள், வேலை அனுமதி விசா வைத்திருப்பவர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புகின்றனர்.

ஆனால் அவர்களின் வருகை நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குச் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...