Breaking Newsமொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது - உறுப்பினர் பதவியில் இருந்து...

மொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்?

-

கோவிட் காலத்தில் பல அமைச்சுக்கள் இரகசியமாகப் பதவியேற்றது தொடர்பான முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீதான விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நடவடிக்கையால் அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அது தொடர்பில் மக்களுக்குத் தெரிவிப்பதற்கு உரிய முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் அதிகாரங்களை தாம் பெற்றுள்ளதாக முன்னாள் பிரதமர் தெரிவித்திருந்த கருத்தையும் விசாரணைக் குழு நிராகரித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்று காலை விசேட செய்தியாளர் மாநாட்டை கூட்டி இது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஆஸ்திரேலிய மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணைக்கு ஸ்காட் மொரிசன் ஒத்துழைக்கவில்லை என்று பிரதம மந்திரி அல்பானீஸ் கடுமையாக குற்றம் சாட்டினார்.

விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை ஸ்கொட் மொரிசன் எடுக்க வேண்டும் என்றும் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

Latest news

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...

விக்டோரியாவில் CFA-க்கு $361 மில்லியன் ஒதுக்கீடு

விக்டோரியாவின் நாட்டு தீயணைப்பு ஆணையத்தின் (CFA) ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த ஆண்டு CFA-க்கு $361 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் மாநில...

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஆஸ்திரேலியர்களின் தனியுரிமை இழக்கப்படும் அறிகுறி

அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்கள் எதிர்காலத்தில் தங்கள் சமூக ஊடக வரலாற்றின் ஐந்து ஆண்டுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்மொழியப்பட்ட...

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஆஸ்திரேலியர்களின் தனியுரிமை இழக்கப்படும் அறிகுறி

அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்கள் எதிர்காலத்தில் தங்கள் சமூக ஊடக வரலாற்றின் ஐந்து ஆண்டுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்மொழியப்பட்ட...

விக்டோரியன் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தேனீ வளர்ப்பு

விக்டோரியாவில் நடந்து வரும் காட்டுத்தீ, உயர்தர பூக்கள் மற்றும் மகரந்தத்தை வழங்கும் மரங்களை தேனீ வளர்ப்பவர்கள் அணுகுவதை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளது. சில பகுதிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வர...