Breaking Newsமொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது - உறுப்பினர் பதவியில் இருந்து...

மொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்?

-

கோவிட் காலத்தில் பல அமைச்சுக்கள் இரகசியமாகப் பதவியேற்றது தொடர்பான முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீதான விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நடவடிக்கையால் அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அது தொடர்பில் மக்களுக்குத் தெரிவிப்பதற்கு உரிய முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் அதிகாரங்களை தாம் பெற்றுள்ளதாக முன்னாள் பிரதமர் தெரிவித்திருந்த கருத்தையும் விசாரணைக் குழு நிராகரித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்று காலை விசேட செய்தியாளர் மாநாட்டை கூட்டி இது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஆஸ்திரேலிய மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணைக்கு ஸ்காட் மொரிசன் ஒத்துழைக்கவில்லை என்று பிரதம மந்திரி அல்பானீஸ் கடுமையாக குற்றம் சாட்டினார்.

விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை ஸ்கொட் மொரிசன் எடுக்க வேண்டும் என்றும் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...