Breaking Newsமொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது - உறுப்பினர் பதவியில் இருந்து...

மொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்?

-

கோவிட் காலத்தில் பல அமைச்சுக்கள் இரகசியமாகப் பதவியேற்றது தொடர்பான முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீதான விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நடவடிக்கையால் அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அது தொடர்பில் மக்களுக்குத் தெரிவிப்பதற்கு உரிய முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் அதிகாரங்களை தாம் பெற்றுள்ளதாக முன்னாள் பிரதமர் தெரிவித்திருந்த கருத்தையும் விசாரணைக் குழு நிராகரித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்று காலை விசேட செய்தியாளர் மாநாட்டை கூட்டி இது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஆஸ்திரேலிய மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணைக்கு ஸ்காட் மொரிசன் ஒத்துழைக்கவில்லை என்று பிரதம மந்திரி அல்பானீஸ் கடுமையாக குற்றம் சாட்டினார்.

விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை ஸ்கொட் மொரிசன் எடுக்க வேண்டும் என்றும் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...