Breaking News மொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது - உறுப்பினர் பதவியில் இருந்து...

மொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்?

-

கோவிட் காலத்தில் பல அமைச்சுக்கள் இரகசியமாகப் பதவியேற்றது தொடர்பான முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீதான விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நடவடிக்கையால் அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அது தொடர்பில் மக்களுக்குத் தெரிவிப்பதற்கு உரிய முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் அதிகாரங்களை தாம் பெற்றுள்ளதாக முன்னாள் பிரதமர் தெரிவித்திருந்த கருத்தையும் விசாரணைக் குழு நிராகரித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்று காலை விசேட செய்தியாளர் மாநாட்டை கூட்டி இது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஆஸ்திரேலிய மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணைக்கு ஸ்காட் மொரிசன் ஒத்துழைக்கவில்லை என்று பிரதம மந்திரி அல்பானீஸ் கடுமையாக குற்றம் சாட்டினார்.

விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை ஸ்கொட் மொரிசன் எடுக்க வேண்டும் என்றும் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.