Newsஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு புதிய கணக்கெடுப்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சியானது தாஸ்மேனியா மாநிலத்தில் 6.2 சதவீதமாக இருந்தது.

6.1 சதவீத ஊதிய வளர்ச்சியுடன் வடக்கு மாகாணம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குயின்ஸ்லாந்து 5.5 சதவீத ஊதிய வளர்ச்சியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, மேற்கு ஆஸ்திரேலியா 4.5 சதவீத அதிகரிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளது.

விக்டோரியாவில் 3.6 சதவீத , நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் தலா 3.5 சதவீத மற்றும் ACT இல் 1.3 சதவீத ஊதியங்கள் அதிகரித்துள்ளன.

வேலைத் துறைகளைப் பொறுத்தவரை, வர்த்தகம் மற்றும் சேவைத் துறையில் அதிக சம்பள உயர்வு ஏற்பட்டுள்ளது.

அரசுப் பணிகளிலும், விளம்பரம் மற்றும் ஊடகத் துறை வேலைகளிலும் மிகக் குறைந்த அளவே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

உடல்நலம் மற்றும் மருத்துவம், சட்டம், நிதி மற்றும் சுரங்க வேலைகள் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் பெறும் முதல் 10 வேலைகளில் ஒன்றாகும்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...