Newsஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு புதிய கணக்கெடுப்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சியானது தாஸ்மேனியா மாநிலத்தில் 6.2 சதவீதமாக இருந்தது.

6.1 சதவீத ஊதிய வளர்ச்சியுடன் வடக்கு மாகாணம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குயின்ஸ்லாந்து 5.5 சதவீத ஊதிய வளர்ச்சியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, மேற்கு ஆஸ்திரேலியா 4.5 சதவீத அதிகரிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளது.

விக்டோரியாவில் 3.6 சதவீத , நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் தலா 3.5 சதவீத மற்றும் ACT இல் 1.3 சதவீத ஊதியங்கள் அதிகரித்துள்ளன.

வேலைத் துறைகளைப் பொறுத்தவரை, வர்த்தகம் மற்றும் சேவைத் துறையில் அதிக சம்பள உயர்வு ஏற்பட்டுள்ளது.

அரசுப் பணிகளிலும், விளம்பரம் மற்றும் ஊடகத் துறை வேலைகளிலும் மிகக் குறைந்த அளவே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

உடல்நலம் மற்றும் மருத்துவம், சட்டம், நிதி மற்றும் சுரங்க வேலைகள் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் பெறும் முதல் 10 வேலைகளில் ஒன்றாகும்.

Latest news

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள எரிமலையில் பல பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

நியூ சவுத் வேல்ஸில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 குதிரை சடலங்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட குதிரை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குதிரைகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை உலர விடுவதாக கிடைத்த தகவலின்...