Breaking Newsதடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவந்தால் $4440 அபராதம்!

தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவந்தால் $4440 அபராதம்!

-

ஆஸ்திரேலியாவின் Biosecurity Act 2015 -உயிரியல் பாதுகாப்பு சட்டம் 2015 திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் இச் சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தங்கள், Biosecurity அச்சுறுத்தல்கள் தொடர்பில் விரைவாக செயல்படுவதற்கு அரசிற்கு உதவும்.

இந்த புதிய சட்டத்திருத்தத்தின்கீழ், தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்கள் உட்பட, உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவிற்குள் எடுத்துவருபவர்கள் மற்றும் அவற்றை பிரகடனம் செய்யத்தவறுபவர்களுக்கான on the spot அபராதம், 4440 டொலர்கள் வரை அதிகரிக்கப்படுகிறது.

மிகக் கடுமையான விதிமீறல்களைச் செய்வோர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு 266,400 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படக் கூடும்.

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Biosecurity அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப அபராதங்களும் மாற்றியமைக்கப்படுவதாக, வேளாண்மை, மீன்வள மற்றும் வனவியல் அமைச்சர் Murray Watt தெரிவித்தார்.

“புதிய நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவின் உயிர் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தவும், 70.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள விவசாய ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்கவும், விவசாய விநியோகச் சங்கிலி முழுவதும் உள்ள 1.6 மில்லியன் வேலைகளைப் பாதுகாக்கவும், நமது வாழ்க்கை முறையைப் பாதுகாக்கவும் உதவும்” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“புதிய சட்டத்திருத்தத்தின்படி ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்ட பொருட்களை திருட்டுத்தனமாக எடுத்துவருபவர்கள் மற்றும் பிரகடனப்பத்திரத்தில் பொய்யான தகவல்களை குறிப்பிடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அந்த இடத்தில்வைத்து 4440 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் – இது முன்னர் விதிக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட 2000 டொலர்கள் அதிகமாகும்” எனவும் அமைச்சர் Murray Watt தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின்கீழ் சில பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவரமுடியாது. அவ்வாறான பொருட்கள் எமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துறைக்கு அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Agriculture.gov.au என்ற இணையத்தளத்தில் ஆஸ்திரேலியாவிற்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவரலாம் என்னென்ன பொருட்களைக் கொண்டுவர முடியாது என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வரும்போது அனைத்து பயணிகளும் Incoming Passenger Card-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பொருட்கள் போன்ற உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை declare- பிரகடனப்படுத்த வேண்டும்.

Biosecurity அதிகாரிகள் நீங்கள் பிரகடனம் செய்த பொருட்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியுமா இல்லையா என்பதை ஆய்வுசெய்து முடிவெடுப்பார்கள்.

ஆபத்தான தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துவருபவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான அனுமதிகூட சிலவேளைகளில் மறுக்கப்படலாம்.

Foot and Mouth நோய்ப்பரவல் உள்ளிடவற்றின் காரணமாக ஆஸ்திரேலியா தனது Biosecurity பாதுகாப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

டன் கணக்கில் உணவை வீசுவதால் ஆஸ்திரேலியர்கள் சந்திக்கும் அபாயங்கள்

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுதோறும் 7.6 மில்லியன் டன் உணவை வீசுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. சராசரி வீட்டிற்கு சுமார் $2,500 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக RMIT பல்கலைக்கழகம்...

விமான டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்துள்ள Virgin Australia

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் மீண்டும் பங்குச் சந்தையில் இணைந்ததைத் தொடர்ந்து, விர்ஜின் ஆஸ்திரேலியாவின் பங்கு விலை 8% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊதிய இழப்புகள் காரணமாக சரிவைச் சந்தித்த...

ஆஸ்திரேலியாவில் போக்குவரத்து விபத்துக்களை அதிகரிக்கும் கைக்கடிகாரம்

வாகனம் ஓட்டும்போது smartwatchகளைப் பயன்படுத்துபவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அபராதங்கள் மாநிலத்தைப் பொறுத்து $125 முதல் $2,000 வரை இருக்கும். வாகனம் ஓட்டும்போது...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ள பணவீக்கம்

ஆஸ்திரேலிய பணவீக்கம் மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. பணவீக்க விகிதம் 2.8 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும்,...