Sportsபங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா - இரண்டாவது போட்டியிலும் தோல்வி!

பங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா – இரண்டாவது போட்டியிலும் தோல்வி!

-

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய, அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மஹிடி ஹாசன் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் மஹமதுல்லா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து, 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ஸ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1 போட்டி மீதமிருக்க பங்களாதேஷ் அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– நன்றி தமிழன்.lk –

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...