Sportsபங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா - இரண்டாவது போட்டியிலும் தோல்வி!

பங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா – இரண்டாவது போட்டியிலும் தோல்வி!

-

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய, அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மஹிடி ஹாசன் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் மஹமதுல்லா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து, 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ஸ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1 போட்டி மீதமிருக்க பங்களாதேஷ் அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– நன்றி தமிழன்.lk –

Latest news

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

இடம்பெயர்வைக் குறைக்க பரிந்துரைகளை வழங்கும் வங்கி முதலாளி

வீட்டுவசதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய குடியேற்றத்தைக் குறைக்குமாறு Commonwealth வங்கியின் தலைவர் Matt Comyn மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறார். நாடாளுமன்ற பொருளாதாரக் குழுவின் முன் ஆஜரான அவர்,...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களிடையே விரைவான பணம் எனப்படும் மோசடி பணத் திட்டம் பரவலாக இருப்பதாக ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரித்துள்ளது. மாணவர்களின் வங்கிக்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களிடையே விரைவான பணம் எனப்படும் மோசடி பணத் திட்டம் பரவலாக இருப்பதாக ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரித்துள்ளது. மாணவர்களின் வங்கிக்...

மிகப்பெரிய அபராதத்தை எதிர்கொள்ளும் Optus நிறுவனம்

மோசடி எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக Optus-இற்கு $826,320 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Coles Mobile கணக்குகளைக் கொண்ட 44 பேரின் தொலைபேசி எண்களை குற்றவாளிகள் குறிவைக்க அனுமதிக்கும்...