Sportsஅரையிறுதிக்குள் நுழைந்த நான்கு அணிகள் தொடர்பான விபரங்கள் - FIFA உலகக்கிண்ணம்

அரையிறுதிக்குள் நுழைந்த நான்கு அணிகள் தொடர்பான விபரங்கள் – FIFA உலகக்கிண்ணம்

-

FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஆர்ஜென்டினா, குரோஷியா, மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில், உலகக்கிண்ண காற்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி குரோஷியாவை எதிர்கொள்கிறது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை மொரோக்கோ அணி எதிர்கொள்கிறது.

இந்த இரு போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலகக்கிண்ண காற்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது ஆபிரிக்க நாடாக மொரோக்கோ பதிவாகியுள்ளது. பலம்வாய்ந்த போர்த்துக்கல் அணியை வீழ்த்தியே அவ்வணி இம்முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடிய பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் இம்முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், மீண்டும் இதே கூட்டணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1986ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக்கிண்ணத்தை தொட்டுப்பார்க்காத ஆர்ஜென்டினா அணி கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், ஜேர்மனியிடம் தோல்வியுற்றதோடு, உலகக்கிண்ண கனவாக மீண்டும் காத்திருப்பு பட்டியலுக்குள் நுழைந்திருந்தது.

எனவே, இம்முறை மேற்படி நான்கு அணிகளும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளமையால், கிண்ணத்தை சுவீகரிக்கும் அணி எதுவாக இருக்கலாம் என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்பது மட்டுமே பதிலாக இருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...

ஸ்பெயினில் இரு அதிவேக தொடருந்துகள் மோதி 21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 100க்கும்...

உண்மை மற்றும் பொய்களை AI கண்டறிவதில் ஆஸ்திரேலியர்களுக்கு சிக்கல்

காமன்வெல்த் வங்கி நடத்திய புதிய ஆய்வில், ஆஸ்திரேலியர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விஷயங்களைப் பற்றிய தங்கள் அறிவை மிகைப்படுத்தி மதிப்பிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 89 சதவீத ஆஸ்திரேலியர்கள் AI-உருவாக்கும்...

ஆஸ்திரேலியாவில் விசா பிரச்சனை உள்ளவர்களுக்கு அரசு உதவி

உங்கள் ஆஸ்திரேலிய விசா காலாவதியாகப் போகிறது அல்லது ஏற்கனவே காலாவதியாகிவிட்டால், நீங்கள் குடிவரவு நிலைத் தீர்வு சேவையிலிருந்து (SRSS) உதவி பெறலாம். இந்த சேவை ஆஸ்திரேலியாவில் விசா...

விமானம் இரு முறை அடிலெய்டுக்குத் திரும்பியதால் பயணிகள் 6 மணி நேர தாமதம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இருந்து Port Lincoln-இற்கு சென்ற QantasLink விமானம் இரண்டு முறை திருப்பி விடப்பட்டதால் பயணிகள் ஆறு மணி நேரம் தாமதமாகினர். அந்த விமானம்...

அமெரிக்காவில் அமைதிப் பேரணிக்குப் பிறகு உலகளவில் புத்த மதத்திற்கு அதிக தேவை

புத்த மதம் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கை முறையாகக் காணப்படுகிறது என்றும், அது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமேயான மதமாக மட்டுமல்லாமல், உலகத்துடன் இணக்கமான வாழ்க்கை...