Sportsஅரையிறுதிக்குள் நுழைந்த நான்கு அணிகள் தொடர்பான விபரங்கள் - FIFA உலகக்கிண்ணம்

அரையிறுதிக்குள் நுழைந்த நான்கு அணிகள் தொடர்பான விபரங்கள் – FIFA உலகக்கிண்ணம்

-

FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஆர்ஜென்டினா, குரோஷியா, மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில், உலகக்கிண்ண காற்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி குரோஷியாவை எதிர்கொள்கிறது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை மொரோக்கோ அணி எதிர்கொள்கிறது.

இந்த இரு போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலகக்கிண்ண காற்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது ஆபிரிக்க நாடாக மொரோக்கோ பதிவாகியுள்ளது. பலம்வாய்ந்த போர்த்துக்கல் அணியை வீழ்த்தியே அவ்வணி இம்முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடிய பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் இம்முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், மீண்டும் இதே கூட்டணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1986ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக்கிண்ணத்தை தொட்டுப்பார்க்காத ஆர்ஜென்டினா அணி கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், ஜேர்மனியிடம் தோல்வியுற்றதோடு, உலகக்கிண்ண கனவாக மீண்டும் காத்திருப்பு பட்டியலுக்குள் நுழைந்திருந்தது.

எனவே, இம்முறை மேற்படி நான்கு அணிகளும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளமையால், கிண்ணத்தை சுவீகரிக்கும் அணி எதுவாக இருக்கலாம் என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்பது மட்டுமே பதிலாக இருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...