Sportsஅரையிறுதிக்குள் நுழைந்த நான்கு அணிகள் தொடர்பான விபரங்கள் - FIFA உலகக்கிண்ணம்

அரையிறுதிக்குள் நுழைந்த நான்கு அணிகள் தொடர்பான விபரங்கள் – FIFA உலகக்கிண்ணம்

-

FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஆர்ஜென்டினா, குரோஷியா, மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில், உலகக்கிண்ண காற்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி குரோஷியாவை எதிர்கொள்கிறது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை மொரோக்கோ அணி எதிர்கொள்கிறது.

இந்த இரு போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலகக்கிண்ண காற்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது ஆபிரிக்க நாடாக மொரோக்கோ பதிவாகியுள்ளது. பலம்வாய்ந்த போர்த்துக்கல் அணியை வீழ்த்தியே அவ்வணி இம்முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடிய பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் இம்முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், மீண்டும் இதே கூட்டணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1986ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக்கிண்ணத்தை தொட்டுப்பார்க்காத ஆர்ஜென்டினா அணி கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், ஜேர்மனியிடம் தோல்வியுற்றதோடு, உலகக்கிண்ண கனவாக மீண்டும் காத்திருப்பு பட்டியலுக்குள் நுழைந்திருந்தது.

எனவே, இம்முறை மேற்படி நான்கு அணிகளும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளமையால், கிண்ணத்தை சுவீகரிக்கும் அணி எதுவாக இருக்கலாம் என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்பது மட்டுமே பதிலாக இருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...