விக்டோரியா மாநிலத்தில் தரம் 12 மாணவர்கள் தோற்றிய VCE பரீட்சை முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு மாநிலத்தில் ATAR மதிப்பெண்களுக்கு இணையான எண்ணிக்கை 70.33 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விக்டோரியாவில் சராசரி ATAR மதிப்பெண் 69.26 ஆக இருந்ததை விட இது அதிகம். கோவிட் சூழ்நிலையை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டதால், VCE தேர்வுக்கு தோற்றிய மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 14ம் தேதிக்குள் தாங்கள் படிக்கும் பாடப் பகுதி குறித்து தெரிவிக்க வேண்டும்.