Sportsதமிழ் பாரம்பரிய உடையில் அழகிய தமிழ் மகன் ஜடேஜா!

தமிழ் பாரம்பரிய உடையில் அழகிய தமிழ் மகன் ஜடேஜா!

-

தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையை உடுத்தி அதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.

பிரபல கிரிக்கெட் வீரரான ஜடேஜா, இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகள், 171 ஒருநாள், 64 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 210 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி, ரெய்னாவுக்கு அடுத்ததாக 150 போட்டிகளில் விளையாடிய 3ஆவது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய தலைவராக ஜடேஜா நியமிக்கப்பட்டார். 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3ஆவது தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார்.

ஆனால் சிஎஸ்கே அணி முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதாலும் தன்னுடைய துடுப்பாட்டம் மோசமானதாலும் தலைவர் பதவியிலிருந்து திடீரென விலகினார் ஜடேஜா. இதையடுத்து தலைவர் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து புதிய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா. தென்னிந்தியாவின் அடையாளத்தை உணர்கிறேன். தமிழ்க்காதல் என ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து, அழகிய தமிழ் மகன் எனக் குறிப்பிட்டு ஜடேஜாவின் புகைப்படத்தை சிஎஸ்கே அணி பகிர்ந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...

NAPLAN League Tables குறித்து கல்வித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

NAPLAN மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதை நிறுத்துமாறு கல்வித் தலைவர்கள் News Corp Australia-இடம் வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய எழுத்தறிவு மற்றும் எண் மதிப்பீட்டுத் திட்டம்...

2 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட ‘Dennis’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட, அழிந்து வரும் நிலையில் உள்ள hawksbill ஆமை ஒன்று, கிரேட் பேரியர் ரீஃபில் மீண்டும் விடப்பட்டுள்ளது. Dennis என்று பெயரிடப்பட்ட கடல் ஆமை, ghost...

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...