Sportsதமிழ் பாரம்பரிய உடையில் அழகிய தமிழ் மகன் ஜடேஜா!

தமிழ் பாரம்பரிய உடையில் அழகிய தமிழ் மகன் ஜடேஜா!

-

தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையை உடுத்தி அதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.

பிரபல கிரிக்கெட் வீரரான ஜடேஜா, இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகள், 171 ஒருநாள், 64 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 210 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி, ரெய்னாவுக்கு அடுத்ததாக 150 போட்டிகளில் விளையாடிய 3ஆவது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய தலைவராக ஜடேஜா நியமிக்கப்பட்டார். 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3ஆவது தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார்.

ஆனால் சிஎஸ்கே அணி முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதாலும் தன்னுடைய துடுப்பாட்டம் மோசமானதாலும் தலைவர் பதவியிலிருந்து திடீரென விலகினார் ஜடேஜா. இதையடுத்து தலைவர் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து புதிய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா. தென்னிந்தியாவின் அடையாளத்தை உணர்கிறேன். தமிழ்க்காதல் என ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து, அழகிய தமிழ் மகன் எனக் குறிப்பிட்டு ஜடேஜாவின் புகைப்படத்தை சிஎஸ்கே அணி பகிர்ந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...