Newsதேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

தேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

-

கடந்த மே மாதம் இடம்பெற்ற கூட்டமைப்புத் தேர்தல் தோல்வி தொடர்பில் லிபரல் கட்சி கூட்டணியினால் தயாரிக்கப்பட்ட உள்ளக அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசனும், போட்டியிட்ட வேட்பாளர்களும் தோல்விக்கு முக்கியக் காரணங்களாக உள்ளனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் கடும் அதிருப்தியும் மற்றொரு காரணியாக உள்ளது என்பதை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகக் குறைந்த பெண் பிரதிநிதித்துவத்தை லிபரல் கட்சி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற லிபரல் கட்சி பின்பற்ற வேண்டிய பல நடவடிக்கைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...