Cinemaஒஸ்கருக்கு தெரிவானது RRR திரைப்படப் பாடல்!

ஒஸ்கருக்கு தெரிவானது RRR திரைப்படப் பாடல்!

-

ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசைக்கான ஒஸ்கர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்.

இந்த பாடல் உக்ரைனில் படமாக்கப்பட்டது என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்தார். இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டது.

“நாம் நாட்டு நாட்டு பாடலை உக்ரைனில் படமாக்கினோம். அது உண்மையான இடம். அதிர்ஷ்டவசமாக உக்ரைன் ஜனாதிபதி தொலைக்காட்சி நடிகராக இருந்ததால் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளார். . வேடிக்கையான விடயம் என்னவென்றால், அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் என ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பாளர் கூறினார்.

நாட்டு நாட்டு பாடலில் கிட்டத்தட்ட 80 மாறுபாடுகள் இருந்தன. நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் பாடலுக்கு 18 தடவைகள் எடுத்து கொண்டனர். எஸ்.எஸ்.ராஜமவுலி கடைசியில் இரண்டாவது தடவையை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தார்.

நன்றி தமிழன்

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...