Newsதற்காலிக பாதுகாப்பு விசாவிலுள்ளவர்களுக்கு நிரந்தர விசா - அடுத்த ஆண்டு அறிவிப்பு!

தற்காலிக பாதுகாப்பு விசாவிலுள்ளவர்களுக்கு நிரந்தர விசா – அடுத்த ஆண்டு அறிவிப்பு!

-

ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் வாழ்ந்துவரும் சுமார் 19 ஆயிரம் அகதிகளுக்கான நிரந்தர விசா வழங்கும் நடவடிக்கை அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படுமென செய்திகள் தெரிவிக்கின்றன.

அகதிகளுக்கான நிரந்தர விசா குறித்த அறிவிப்பை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடுவதற்கு லேபர் அரசு திட்டமிட்டுள்ளதாக The Guardian, Sydney Morning Herald உள்ளிட்ட ஊடகச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்கீழ் ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துவரும் சுமார் 19 ஆயிரம் அகதிகள், நிரந்தர வதிவிட விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிபெறவுள்ளதுடன் social security benefits போன்ற அரச மானியங்களைப் பெறுவதற்கும் தகுதிபெறவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக சென்றுவருவதற்கும், தமது குடும்பத்தினரை ஆஸ்திரேலியா வரவழைப்பதற்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

இவ்வாறு நிரந்தர விசா பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களில் ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான், மியன்மார் மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும் TPV எனப்படும் 3 வருட விசா அல்லது SHEV எனப்படும் 5 வருட விசாவில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த விசாவை கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் ஒரு தடவையாவது புதுப்பித்திருக்க வேண்டும்.

2023ம் ஆண்டில் அரசு அறிவிக்கவுள்ள மாற்றத்தின்கீழ் குறித்த 19 ஆயிரம் பேரும், அவர்களது TPV அல்லது SHEVஇலிருந்து Resolution of Status Visa என்பதற்கு மாற்றப்படுவர். அதன் பின்னர் அவர்கள் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிடம்பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் உள்ளவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்கப்படும் என்பதாக தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருந்தபோதிலும், இந்த வாக்குறுதியை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்கின்றன.

TPVகள் மற்றும் SHEVகளை ஒழிப்பதற்கான அதன் வாக்குறுதியை லேபர்கட்சி எப்போது நிறைவேற்றும் என, கடந்த மாதம் நாடாளுமன்றத்தில்வைத்து குடிவரவு அமைச்சர் Andrew Gilesஇடம் சுயேச்சை எம்.பி.க்கள் Andrew Wilkie மற்றும் Monique Ryan இருவரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் Giles, இவ்விடயத்தில் உள்துறை அமைச்சர் Clare O’Neil உடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்திருந்தார்.

அதேநேரம் புதிய ஆண்டு ஆரம்பப்பகுதியில் TPV மற்றும் SHEV குறித்த தமது கொள்கை அறிவிப்பை அரசு வெளியிடும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால் தமது அகதி விண்ணப்பக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மேன்முறையீடுசெய்துவிட்டு Bridging விசாவுடன் காத்திருக்கும் சுமார் 12 ஆயிரம் புகலிடக்கோரிக்கையாளர்களின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இவர்களது விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு அமைச்சர் இறுதிமுடிவினை இன்னமும் எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

Latest news

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...

இந்தியாவில் பரவும் வைரஸ் கோவிட்டை விட மோசமானதா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பதிவான கொடிய Nipah வைரஸ் பரவுவதால், முழு ஆசியப் பகுதியும் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

விக்டோரியா காட்டுத்தீயில் 400 வீடுகள் எரிந்து நாசம்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ, உயிருக்கும் சொத்துக்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மாநில வரலாற்றில் மிக அதிக வெப்ப அலைக்குப் பிறகும் நிலைமை...