Sportsசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் முழு விபரம் - IPL...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் முழு விபரம் – IPL 2023

-

16-வது ஐ.பி.எல். T20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில். இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.

கொச்சியில் நடைபெற்ற ஐ.பி.எல் மினி ஏலத்தில் 10 அணிகள்.167 கோடி(இந்திய ரூபா) செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் முழு விவரம் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், ஏலத்தில் முதல் வீரராக, இந்திய வீரர் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 இலட்சத்திற்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடி (இந்திய ரூபா) எனும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது .

ஆந்திராவைச் சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 இலட்சத்திற்கு(இந்திய ரூபா), சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஹரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இவரை இறுதியில் ரூ. 60 இலட்சத்திற்கு (இந்திய ரூபா) சென்னை அணி சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேம்சனை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு(இந்திய ரூபா) சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சகலதுறை வீரரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 இலட்சத்திற்கு(இந்திய ரூபா) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் முழு விவரம் வருமாறு:

எம்.எஸ்.டோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரன, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா

நன்றி தமிழன்

Latest news

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

ANZ வாடிக்கையாளர்களுக்கு வெளியான துயரமான செய்தி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் 0.10%...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு புதிய உயிரினங்கள்

ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் இரண்டு புதிய உயிரினங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சியில், புதிய ஒளி ஊடுருவ கூடிய நண்டு(semi-transparent Porcelain...

மனைவியுடன் ஷாப்பிங் செல்லும் கணவர்களுக்கு ஒரு நற்செய்தி

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக ஒரு புதிய AI ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. Woody என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சிட்னியின் Silverdale Shopping Centre-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. BellBots-ன் நிறுவனர்...

மெல்பேர்ண் கடற்கரையில் பிரித்தானிய பயணிக்கு நேர்ந்த சோகம்

மெல்பேர்ண் கடற்கரையில் நீர்சறுக்கு விளையாடிய பிரித்தானியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மெல்பேர்ண் கடற்கரையில் பலத்த காற்றுக்கு மத்தியில் 43 வயது பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் நீர் சறுக்கு(surfing) விளையாடிய...

வானிலை வலைத்தளத்திற்கு என்ன ஆனது?

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் புதிய வலைத்தளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால் புதிய வலைத்தளம் பயனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. புதிய தளம் பரந்த பொதுமக்களுக்கு "தெளிவான மற்றும்...