News மோசமடைந்த நிலையில் பீலேவின் உடல் நிலை!

மோசமடைந்த நிலையில் பீலேவின் உடல் நிலை!

-

பீலே உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் இவரது சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, (82 வயது) மூன்று முறை உலகக்கிண்ணம் (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற சத்திரசிகிச்சை செய்த இவரது, பெருங்குடலின் வலது பக்கத்தில் புற்றுநோய் கட்டி இருந்தமை கண்டறியப்பட்டது.

உடனடியாக சத்திரசிகிக்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பீலே, சமீபத்தில் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் சிகிக்கைக்காக இவருக்கு ‘கீமோதெரபி’ சிகிச்சை தரப்பட்டது. பின் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

பீலே விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் பிரார்த்தனைகள் குவிகின்றன. இதனிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது. இவரது உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பீலே மகள் கெலி நாசிமென்டோ கூறுகையில்,” மருத்துவர்கள் தரப்பில் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் தங்குவது தான் சிறந்தது. இங்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்றார்.

நன்றி தமிழன்

Latest news

அதிகரிக்கப்படும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கொடுப்பனவு மற்றும் பணிக்கான போனஸ் இருப்பு தொகை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான பல திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது ஓய்வு...

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளை கட்டுப்படுத்த NSW முடிவு

சட்டவிரோத எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் முடிவு செய்துள்ளது.

மெல்போர்னின் வடக்கே பல பகுதிகளில் லேசான நடுக்கம்

மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்...

வாக்கெடுப்பில் “YES” முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது

சுதேசி ஹடா வாக்கெடுப்பில், YES முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது. நியூஸ்போல் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில்,...

வடக்கு மாகாண முதலமைச்சரை தாக்கியதாக பெண் மீது குற்றம்

வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் தாக்கப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 56 வயதுடைய...

உலகக் கோப்பை ரக்பியில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா

ரக்பி உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா விலக வேண்டியதாயிற்று. அது வேல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன்.