Newsமோசமடைந்த நிலையில் பீலேவின் உடல் நிலை!

மோசமடைந்த நிலையில் பீலேவின் உடல் நிலை!

-

பீலே உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் இவரது சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, (82 வயது) மூன்று முறை உலகக்கிண்ணம் (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற சத்திரசிகிச்சை செய்த இவரது, பெருங்குடலின் வலது பக்கத்தில் புற்றுநோய் கட்டி இருந்தமை கண்டறியப்பட்டது.

உடனடியாக சத்திரசிகிக்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பீலே, சமீபத்தில் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் சிகிக்கைக்காக இவருக்கு ‘கீமோதெரபி’ சிகிச்சை தரப்பட்டது. பின் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

பீலே விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் பிரார்த்தனைகள் குவிகின்றன. இதனிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது. இவரது உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பீலே மகள் கெலி நாசிமென்டோ கூறுகையில்,” மருத்துவர்கள் தரப்பில் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் தங்குவது தான் சிறந்தது. இங்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்றார்.

நன்றி தமிழன்

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...