Article2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் - விலையும் வெளியானது.

2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் – விலையும் வெளியானது.

-

ஆப்பிள் தனது ‘ஆப்பிள் கார்’ என குறிப்பிடப்படும் மின்சார வாகனத்தை 2026-ஆம் ஆண்டு வரை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இதன் விலை $1,00,000-க்குள் (ரூ. 80 லட்சத்திற்குள்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம், ஆதன் self-driving மின்சார வாகனத்திற்கான அதன் பார்வையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ‘டைட்டன்’ என அழைக்கப்படும் இந்த வாகனத்தின் திட்டம் கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்ததாகத் தெரிகிறது.

தொடக்கத்தில், ஐபோன் நிறுவனம் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ஒரு காரை உருவாக்க திட்டமிட்டது, இதில் பயணிகள் ஒரு limousine-style-ல் ஒருவரையொருவர் எதிரெதிரே பார்க்கும் வகையில் அமரலாம் என கூறப்பட்டது.

ஆனால், இத்திட்டம் இப்போது நோக்கம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் ஓட்டுநர் இருக்கை, ஸ்டீயரிங் மற்றும் பெடல்களுடன் மிகவும் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த காரில் fully autonomous driving அல்லது self-driving அம்சம் இருக்காது, ஆனால் நெடுஞ்சாலைகளில் தானாகவே ஓட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

சாலையில் வாகனம் ஓட்டும்போது பயனர்கள் கேம்களை விளையாடுவதற்கு அல்லது வீடியோக்களைப் பார்ப்பதற்கு போதுமான அளவிற்கு சுயமாக இயங்கும், ஆனால் அதிக ட்ராபிக் அல்லது மோசமான வானிலையின் போது அவ்வாறு இயங்காது என கூறப்படுகிறது

இந்த வாகனத்திற்கான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் காரின் விலை முதலில் எதிர்பார்க்கப்பட்ட $120,000க்கு பதிலாக $100,000க்குக் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது.

வாகனத்தின் வடிவமைப்பு இன்னும் நிறுவனத்தால் வேலை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அது முடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, காருக்கான அம்சங்களின் பட்டியல் 2024-ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2026-ஆம் ஆண்டின் வெளியீட்டிற்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டில் சோதனை தொடங்கும்.

Latest news

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...

விண்வெளியில் இருந்துவரும் விசித்திரமான ரேடியோ அலைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வானியலாளர்கள் குழு, பால்வீதியின் மையத்திலிருந்து வரும் சில விசித்திரமான ரேடியோ சிக்னல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த "நீண்ட கால ரேடியோ டிரான்சிண்ட்கள்" அல்லது LPTகள்,...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

இந்தோனேசிய துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் இயற்கை சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சுமார் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐந்து...