Article2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் - விலையும் வெளியானது.

2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் – விலையும் வெளியானது.

-

ஆப்பிள் தனது ‘ஆப்பிள் கார்’ என குறிப்பிடப்படும் மின்சார வாகனத்தை 2026-ஆம் ஆண்டு வரை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இதன் விலை $1,00,000-க்குள் (ரூ. 80 லட்சத்திற்குள்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம், ஆதன் self-driving மின்சார வாகனத்திற்கான அதன் பார்வையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ‘டைட்டன்’ என அழைக்கப்படும் இந்த வாகனத்தின் திட்டம் கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்ததாகத் தெரிகிறது.

தொடக்கத்தில், ஐபோன் நிறுவனம் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ஒரு காரை உருவாக்க திட்டமிட்டது, இதில் பயணிகள் ஒரு limousine-style-ல் ஒருவரையொருவர் எதிரெதிரே பார்க்கும் வகையில் அமரலாம் என கூறப்பட்டது.

ஆனால், இத்திட்டம் இப்போது நோக்கம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் ஓட்டுநர் இருக்கை, ஸ்டீயரிங் மற்றும் பெடல்களுடன் மிகவும் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த காரில் fully autonomous driving அல்லது self-driving அம்சம் இருக்காது, ஆனால் நெடுஞ்சாலைகளில் தானாகவே ஓட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

சாலையில் வாகனம் ஓட்டும்போது பயனர்கள் கேம்களை விளையாடுவதற்கு அல்லது வீடியோக்களைப் பார்ப்பதற்கு போதுமான அளவிற்கு சுயமாக இயங்கும், ஆனால் அதிக ட்ராபிக் அல்லது மோசமான வானிலையின் போது அவ்வாறு இயங்காது என கூறப்படுகிறது

இந்த வாகனத்திற்கான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் காரின் விலை முதலில் எதிர்பார்க்கப்பட்ட $120,000க்கு பதிலாக $100,000க்குக் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது.

வாகனத்தின் வடிவமைப்பு இன்னும் நிறுவனத்தால் வேலை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அது முடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, காருக்கான அம்சங்களின் பட்டியல் 2024-ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2026-ஆம் ஆண்டின் வெளியீட்டிற்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டில் சோதனை தொடங்கும்.

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

18–20 வயதுடைய இளம் தொழிலாளர்கள் வயதுவந்தோர் ஊதியத்தைப் பெறுவார்களா?

18, 19 மற்றும் 20 வயதுடைய இளம் தொழிலாளர்களுக்கு பெரியவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டால், அது ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்...

பாலர் பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் அரசு

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் 100 பாலர் பள்ளிகளைக் கட்ட அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் இரு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் பள்ளிக் கல்வியை வழங்க...

போராட்டங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களிடமிருந்து அதிகரித்துள்ள புகார்கள்

March for Australia போராட்டங்களைத் தொடர்ந்து, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கான லைஃப்லைனின் Lifeline’s National Crisis Support Hotline-இற்கு அழைப்புகள் அதிகரித்துள்ளதாக...