Article2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் - விலையும் வெளியானது.

2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் – விலையும் வெளியானது.

-

ஆப்பிள் தனது ‘ஆப்பிள் கார்’ என குறிப்பிடப்படும் மின்சார வாகனத்தை 2026-ஆம் ஆண்டு வரை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இதன் விலை $1,00,000-க்குள் (ரூ. 80 லட்சத்திற்குள்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம், ஆதன் self-driving மின்சார வாகனத்திற்கான அதன் பார்வையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ‘டைட்டன்’ என அழைக்கப்படும் இந்த வாகனத்தின் திட்டம் கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்ததாகத் தெரிகிறது.

தொடக்கத்தில், ஐபோன் நிறுவனம் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ஒரு காரை உருவாக்க திட்டமிட்டது, இதில் பயணிகள் ஒரு limousine-style-ல் ஒருவரையொருவர் எதிரெதிரே பார்க்கும் வகையில் அமரலாம் என கூறப்பட்டது.

ஆனால், இத்திட்டம் இப்போது நோக்கம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் ஓட்டுநர் இருக்கை, ஸ்டீயரிங் மற்றும் பெடல்களுடன் மிகவும் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த காரில் fully autonomous driving அல்லது self-driving அம்சம் இருக்காது, ஆனால் நெடுஞ்சாலைகளில் தானாகவே ஓட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

சாலையில் வாகனம் ஓட்டும்போது பயனர்கள் கேம்களை விளையாடுவதற்கு அல்லது வீடியோக்களைப் பார்ப்பதற்கு போதுமான அளவிற்கு சுயமாக இயங்கும், ஆனால் அதிக ட்ராபிக் அல்லது மோசமான வானிலையின் போது அவ்வாறு இயங்காது என கூறப்படுகிறது

இந்த வாகனத்திற்கான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் காரின் விலை முதலில் எதிர்பார்க்கப்பட்ட $120,000க்கு பதிலாக $100,000க்குக் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது.

வாகனத்தின் வடிவமைப்பு இன்னும் நிறுவனத்தால் வேலை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அது முடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, காருக்கான அம்சங்களின் பட்டியல் 2024-ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2026-ஆம் ஆண்டின் வெளியீட்டிற்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டில் சோதனை தொடங்கும்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...