News26 வது மாடியில் இருந்து விழுந்தும் சின்ன சேதாரம் கூட ஆகாத...

26 வது மாடியில் இருந்து விழுந்தும் சின்ன சேதாரம் கூட ஆகாத iPhone!

-

சீனாவில் 26 வது மாடியில் இருந்து கீழே விழுந்த iPhone சேதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள நிங்டேயில் உள்ள சீன பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 26வது மாடியின் பால்கனியில் இருந்து தனது iPhone 12 Pro ஸ்மார்ட்போனை தவறவிட்டுள்ளார்.

டிசம்பர் 18ம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், 26வது மாடியில் இருந்து அவருடைய ஐபோன் கீழே விழுந்தாலும், அது முழுமையாக சேதமடையவில்லை என்று கூறப்படுகிறது.

26வது மாடியில் இருந்து ஐபோன் 12 ப்ரோ கீழே விழுந்தாலும், அது கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள ஃபோம் செய்யப்பட்ட மேடையில் விழுந்ததால் சேதமடையாமல் தப்பித்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பெண்ணின் ஐபோனை அந்த கட்டிடத்தின் உதவியாளர்கள் இரண்டாவது மாடியில் இருந்து மீட்டெடுத்த போது ஐபோன் சாதனத்தின் டிஸ்பிளே சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எப்படி இது சாத்தியம் என்று தான் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஐபோன் பில்ட் (iPhone built) அவ்வளவு தரமானது என்று ஆப்பிள் ரசிகர்கள் கெத்தாக ஸீன் போட்டுக் கொண்டு வருகின்றனர்.

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...