News26 வது மாடியில் இருந்து விழுந்தும் சின்ன சேதாரம் கூட ஆகாத...

26 வது மாடியில் இருந்து விழுந்தும் சின்ன சேதாரம் கூட ஆகாத iPhone!

-

சீனாவில் 26 வது மாடியில் இருந்து கீழே விழுந்த iPhone சேதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள நிங்டேயில் உள்ள சீன பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 26வது மாடியின் பால்கனியில் இருந்து தனது iPhone 12 Pro ஸ்மார்ட்போனை தவறவிட்டுள்ளார்.

டிசம்பர் 18ம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், 26வது மாடியில் இருந்து அவருடைய ஐபோன் கீழே விழுந்தாலும், அது முழுமையாக சேதமடையவில்லை என்று கூறப்படுகிறது.

26வது மாடியில் இருந்து ஐபோன் 12 ப்ரோ கீழே விழுந்தாலும், அது கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள ஃபோம் செய்யப்பட்ட மேடையில் விழுந்ததால் சேதமடையாமல் தப்பித்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பெண்ணின் ஐபோனை அந்த கட்டிடத்தின் உதவியாளர்கள் இரண்டாவது மாடியில் இருந்து மீட்டெடுத்த போது ஐபோன் சாதனத்தின் டிஸ்பிளே சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எப்படி இது சாத்தியம் என்று தான் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஐபோன் பில்ட் (iPhone built) அவ்வளவு தரமானது என்று ஆப்பிள் ரசிகர்கள் கெத்தாக ஸீன் போட்டுக் கொண்டு வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...