News26 வது மாடியில் இருந்து விழுந்தும் சின்ன சேதாரம் கூட ஆகாத...

26 வது மாடியில் இருந்து விழுந்தும் சின்ன சேதாரம் கூட ஆகாத iPhone!

-

சீனாவில் 26 வது மாடியில் இருந்து கீழே விழுந்த iPhone சேதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள நிங்டேயில் உள்ள சீன பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 26வது மாடியின் பால்கனியில் இருந்து தனது iPhone 12 Pro ஸ்மார்ட்போனை தவறவிட்டுள்ளார்.

டிசம்பர் 18ம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், 26வது மாடியில் இருந்து அவருடைய ஐபோன் கீழே விழுந்தாலும், அது முழுமையாக சேதமடையவில்லை என்று கூறப்படுகிறது.

26வது மாடியில் இருந்து ஐபோன் 12 ப்ரோ கீழே விழுந்தாலும், அது கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள ஃபோம் செய்யப்பட்ட மேடையில் விழுந்ததால் சேதமடையாமல் தப்பித்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பெண்ணின் ஐபோனை அந்த கட்டிடத்தின் உதவியாளர்கள் இரண்டாவது மாடியில் இருந்து மீட்டெடுத்த போது ஐபோன் சாதனத்தின் டிஸ்பிளே சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எப்படி இது சாத்தியம் என்று தான் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஐபோன் பில்ட் (iPhone built) அவ்வளவு தரமானது என்று ஆப்பிள் ரசிகர்கள் கெத்தாக ஸீன் போட்டுக் கொண்டு வருகின்றனர்.

Latest news

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...

பூமியைப் போன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

பூமியைப் போலவே உயிரினங்கள் வாழக்கூடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு புதிய கிரகத்தை ஆஸ்திரேலிய வானியலாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இது 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் புல்டோசர் விபத்தில் உயிரிழந்துள்ளார். துறைமுக வளாகத்தில் இயங்கி வந்த இரண்டு புல்டோசர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...