News26 வது மாடியில் இருந்து விழுந்தும் சின்ன சேதாரம் கூட ஆகாத...

26 வது மாடியில் இருந்து விழுந்தும் சின்ன சேதாரம் கூட ஆகாத iPhone!

-

சீனாவில் 26 வது மாடியில் இருந்து கீழே விழுந்த iPhone சேதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள நிங்டேயில் உள்ள சீன பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 26வது மாடியின் பால்கனியில் இருந்து தனது iPhone 12 Pro ஸ்மார்ட்போனை தவறவிட்டுள்ளார்.

டிசம்பர் 18ம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், 26வது மாடியில் இருந்து அவருடைய ஐபோன் கீழே விழுந்தாலும், அது முழுமையாக சேதமடையவில்லை என்று கூறப்படுகிறது.

26வது மாடியில் இருந்து ஐபோன் 12 ப்ரோ கீழே விழுந்தாலும், அது கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள ஃபோம் செய்யப்பட்ட மேடையில் விழுந்ததால் சேதமடையாமல் தப்பித்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பெண்ணின் ஐபோனை அந்த கட்டிடத்தின் உதவியாளர்கள் இரண்டாவது மாடியில் இருந்து மீட்டெடுத்த போது ஐபோன் சாதனத்தின் டிஸ்பிளே சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எப்படி இது சாத்தியம் என்று தான் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஐபோன் பில்ட் (iPhone built) அவ்வளவு தரமானது என்று ஆப்பிள் ரசிகர்கள் கெத்தாக ஸீன் போட்டுக் கொண்டு வருகின்றனர்.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...