Breaking Newsஉலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட ஜாம்பவான் பீலே காலமானார்!

உலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட ஜாம்பவான் பீலே காலமானார்!

-

உலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர் பீலே (82) பிரேசிலில் காலமானார்!

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல உதைபந்து வீரர் பீலேவுக்கு (வயது 82). கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது.

சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியது.

மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை வைத்தியர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் பீலே மூன்று முறை உலகக் கோப்பையை வென்றவர். அவரது முதல் உலகக் கோப்பை வெற்றி 1958 இல் ஸ்வீடனில் கிடைத்தது. அரையிறுதியில் ஹாட்ரிக் கோல் அடித்தார். பிரேசிலின் 1962 உலகக் கோப்பையின் போது அவர் காயமடைந்தார்.

தொடர்ந்து பீலே 1970 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை கோப்பையை தனது கைகளில் பெற்றார் மற்றும் தங்கப் பந்தை வென்றார். போட்டியில் 4 கோல்கள் அடித்தார். பிபா (FIFA) உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார். .

இந்நிலையில் பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். .

நன்றி தமிழன்

Latest news

மாணவர்களுக்கான பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ள பள்ளி

குயின்ஸ்லாந்தில் உள்ள ஆண்கள் கல்லூரியான St Edmund’s கல்லூரி விதித்த புதிய சிகை அலங்கார விதிகள், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளி பருவம்...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

Ampol-இன் முடிவால் எரிபொருள் விலை உயருமா?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான Ampol, EG ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 500 சேவை நிலையங்களை கையகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Ampol-இன் முடிவால் எரிபொருள் விலை உயருமா?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான Ampol, EG ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 500 சேவை நிலையங்களை கையகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் அல்பானீஸ்

Bondi பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேசிய துக்க தினத்தில் உரையாற்றும் போதே அவர்...