Breaking Newsகழிவு நீரால் பரவும் கொரோனா பரவல் – அச்சத்தில் சீன மக்கள்!

கழிவு நீரால் பரவும் கொரோனா பரவல் – அச்சத்தில் சீன மக்கள்!

-

சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது.

சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதிலும் தீவிர பாதிப்பு அதிகம் ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில வாரங்களில் மாத்திரம் பல கோடி பேருக்கு அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெய்ஜிங், ஷங்காய் போன்ற பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்கனவே உச்சம் தொட்டுள்ள நிலையில், இப்போது அடுத்தகட்டமாக மற்ற நகரங்களிலும் வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. சீன தடுப்பூசிகளால் தீவிர பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதும் வைரஸ் பரவல் இந்தளவுக்கு வேகமாகப் பரவ ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இதற்கிடையே கொரோனா பரவலைக் கண்காணிக்கக் கழிவு நீர் அமைப்புகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் சில நாடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெய்ஜிங் மற்றும் ஷென்சென் நகரங்களில் சோதனை முறையில் கழிவுநீர் கண்காணிப்பு முறையைச் சீனா ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கழிவு நீர் மூலம் கொரோனா பரவுகிறதா என்பதைக் கண்காணிக்கவே சீனா இந்த நடைமுறையைக் கையில் எடுத்துள்ளது.

முதற்கட்ட சோதனை அடிப்படையில் பெரு நகரங்களில் மட்டும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது. அதேநேரம் கழிவு நீர், மழைநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுநீர் என அனைத்தும் ஒரே குழாய் அமைப்பில் வருவதால், வைரஸ் பாதிப்பு குறித்த துல்லியமான பதிவுகளை பெறுவது கடினம் என்பதால் கொரோனா பாதிப்பைக் கண்காணிக்க மாற்று வழிமுறைகளையும் சீனா சிந்திக்க வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Paracetamol பற்றி டிரம்ப் கூறிய பொய்யான தகவல்கள்

பொதுவான வலி நிவாரணி பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர். அமெரிக்காவில் Tylenol என்ற பிராண்ட் பெயராலும் ஆஸ்திரேலியாவில் Paracetamol என்ற பிராண்ட்...

மீண்டும் பரிசீலனையில் உள்ள கூர்மையான ஆயுதச் சட்டங்கள்

கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெர்த்தில் ஒரு விருந்தில் இளைஞர்கள் குழுவிற்கு இடையே...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...

விக்டோரியா மாநிலத்தில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, விக்டோரியா தற்போது கடுமையான குற்ற அலையின் மத்தியில் உள்ளது. மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிக அதிகமாக...

பெர்த்தில் உள்ள சீன உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பெர்த்தில் உள்ள ஒரு பிரபலமான சீன உணவகத்தின் சமையலறையில் எரிந்து கொண்டிருந்த எரிவாயு அடுப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முந்தைய நாள் உணவகம் மூடப்பட்டபோது, ​​எதிர்பாராத விதமாக...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...