Breaking Newsகழிவு நீரால் பரவும் கொரோனா பரவல் – அச்சத்தில் சீன மக்கள்!

கழிவு நீரால் பரவும் கொரோனா பரவல் – அச்சத்தில் சீன மக்கள்!

-

சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது.

சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதிலும் தீவிர பாதிப்பு அதிகம் ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில வாரங்களில் மாத்திரம் பல கோடி பேருக்கு அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெய்ஜிங், ஷங்காய் போன்ற பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்கனவே உச்சம் தொட்டுள்ள நிலையில், இப்போது அடுத்தகட்டமாக மற்ற நகரங்களிலும் வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. சீன தடுப்பூசிகளால் தீவிர பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதும் வைரஸ் பரவல் இந்தளவுக்கு வேகமாகப் பரவ ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இதற்கிடையே கொரோனா பரவலைக் கண்காணிக்கக் கழிவு நீர் அமைப்புகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் சில நாடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெய்ஜிங் மற்றும் ஷென்சென் நகரங்களில் சோதனை முறையில் கழிவுநீர் கண்காணிப்பு முறையைச் சீனா ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கழிவு நீர் மூலம் கொரோனா பரவுகிறதா என்பதைக் கண்காணிக்கவே சீனா இந்த நடைமுறையைக் கையில் எடுத்துள்ளது.

முதற்கட்ட சோதனை அடிப்படையில் பெரு நகரங்களில் மட்டும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது. அதேநேரம் கழிவு நீர், மழைநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுநீர் என அனைத்தும் ஒரே குழாய் அமைப்பில் வருவதால், வைரஸ் பாதிப்பு குறித்த துல்லியமான பதிவுகளை பெறுவது கடினம் என்பதால் கொரோனா பாதிப்பைக் கண்காணிக்க மாற்று வழிமுறைகளையும் சீனா சிந்திக்க வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...