Newsகடைசி ஆசையை நிறைவேற்றி பீலேவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

கடைசி ஆசையை நிறைவேற்றி பீலேவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

-

உதைபந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கிண்ணத்தை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் நேற்று முன்தினம் காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பீலேவின் உடல் தீயணைப்பு வாகனத்தில் ஊர்வலமாக சென்டோஸ் வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது உதைபந்து மன்னனுக்கு விடையளித்தனர். அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

14 அடுக்கு மாடிகளைக் கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தை அவரது உடல் சென்றடைந்தது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். அங்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்தனர். அதைத் தொடர்ந்து 9-வது மாடியில் பீலே என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.

தனது மறைவுக்கு பிறகு ஸ்டேடியத்தை நோக்கியே தனது உடலை அடக்கம் செய்யவேண்டும் என பீலே கூறியிருந்தாராம். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...

ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் robotics

ஆஸ்திரேலியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடங்களை ஊக்குவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு robotics அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, coding வகுப்புகள், electronic tablet மற்றும்...

குற்றச் செயல்களுக்காக குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவைக் கண்டறிய நடவடிக்கைகள்

துப்பாக்கிச் சூடு மற்றும் வீடு கொள்ளைகளை நடத்துவதற்கு குழந்தைகளைச் சேர்ப்பதாக ஒரு புதிய குற்றக் கும்பல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. G7 என்று அழைக்கப்படும் இந்தக் குழுவில்...

விக்டோரியாவில் கால் பகுதி குடும்பங்கள் விரைவில் $100 மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கலாம்

விக்டோரியாவின் அடுத்த சுற்று மின் சேமிப்பு போனஸுக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 25 முதல், சலுகை அட்டை உள்ள சுமார் 900,000...