Newsகழிவறை Tissues-ம் வீட்டிலிருந்து எடுத்துசெல்லும் ஊழியர்கள் - சிக்கனத்தின் உச்சத்தில் Twitter!

கழிவறை Tissues-ம் வீட்டிலிருந்து எடுத்துசெல்லும் ஊழியர்கள் – சிக்கனத்தின் உச்சத்தில் Twitter!

-

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒக்டோபரில், உலகின் மிக பிரபல சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான அவர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்தார்.

தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளையும் மஸ்க் மேற்கொண்டார். நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, ட்விட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூழலில், நிறுவனத்தில் பணியாற்ற கூடிய, கட்டிடங்களை தூய்மை செய்து, பராமரிக்கும் வேலையில் ஈடுபட்ட ஊழியர்களில் பலர் சென்பிரான்சிஸ்கோ நகரில், தங்களுக்கு அதிகளவில் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, அவர்களை வேலையை விட்டு நீக்கும் உத்தரவை மஸ்க் எடுத்துள்ளார். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால், நிறுவன பணியாளர்கள் மிரண்டு போயுள்ளனர்.

ட்விட்டரில் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, நிறுவன பணியாளர்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும்போது, தங்களுடன் கழிவறைக்கு செல்வதற்கு தேவையான டிஷ்யூ பேப்பரையும் உடன் கொண்டு செல்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் காவல் பணி மற்றும் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடாத நிலையில், அழுக்கடைந்த கழிவறைகள், தூய்மையற்ற பணி சூழல் காணப்படுகிறது.

சென்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிட்டோர் சாப்பிட்டு விட்டு, கீழே போடும் குப்பைகள், மீதமுள்ள உணவுகள் மற்றும் வியர்வை நாற்றம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

எலான் மஸ்க்கின் மற்றொரு நடவடிக்கையாக சென்பிரான்சிஸ்கோ நிறுவன அலுவலகத்தில் 4 தளங்களை மூடும்படியும், மீதமுள்ள 2 தளங்களில் ஊழியர்கள் பணிபுரியும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோல், நியூயார்க் அலுவலகங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களையும் மஸ்க் வேலையில் இருந்து தூக்கி உள்ளார். எனினும், சென்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அலுவலகத்திற்கான வாடகையை ட்விட்டர் நிறுவனம் செலுத்த தவறி விட்டது என்றும் தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மஸ்க் கூறும்போது, 300 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான பட்ஜெட் பற்றாக்குறையை தவிர்க்கவே இந்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

ட்விட்டரின் கலிபோர்னியா, சாக்ரமெண்டோ நகர தகவல் மையங்களும் அவரது நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூடப்பட்டு உள்ளன. இது ட்விட்டரில் செயற்பாட்டை பாதிக்கும் என பணியாளர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் சிக்கன நடவடிக்கை மிக அவசியம் என்று பதிலாக எடுத்து கூறப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...