Newsகழிவறை Tissues-ம் வீட்டிலிருந்து எடுத்துசெல்லும் ஊழியர்கள் - சிக்கனத்தின் உச்சத்தில் Twitter!

கழிவறை Tissues-ம் வீட்டிலிருந்து எடுத்துசெல்லும் ஊழியர்கள் – சிக்கனத்தின் உச்சத்தில் Twitter!

-

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒக்டோபரில், உலகின் மிக பிரபல சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான அவர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்தார்.

தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளையும் மஸ்க் மேற்கொண்டார். நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, ட்விட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூழலில், நிறுவனத்தில் பணியாற்ற கூடிய, கட்டிடங்களை தூய்மை செய்து, பராமரிக்கும் வேலையில் ஈடுபட்ட ஊழியர்களில் பலர் சென்பிரான்சிஸ்கோ நகரில், தங்களுக்கு அதிகளவில் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, அவர்களை வேலையை விட்டு நீக்கும் உத்தரவை மஸ்க் எடுத்துள்ளார். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால், நிறுவன பணியாளர்கள் மிரண்டு போயுள்ளனர்.

ட்விட்டரில் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, நிறுவன பணியாளர்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும்போது, தங்களுடன் கழிவறைக்கு செல்வதற்கு தேவையான டிஷ்யூ பேப்பரையும் உடன் கொண்டு செல்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் காவல் பணி மற்றும் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடாத நிலையில், அழுக்கடைந்த கழிவறைகள், தூய்மையற்ற பணி சூழல் காணப்படுகிறது.

சென்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிட்டோர் சாப்பிட்டு விட்டு, கீழே போடும் குப்பைகள், மீதமுள்ள உணவுகள் மற்றும் வியர்வை நாற்றம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

எலான் மஸ்க்கின் மற்றொரு நடவடிக்கையாக சென்பிரான்சிஸ்கோ நிறுவன அலுவலகத்தில் 4 தளங்களை மூடும்படியும், மீதமுள்ள 2 தளங்களில் ஊழியர்கள் பணிபுரியும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோல், நியூயார்க் அலுவலகங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களையும் மஸ்க் வேலையில் இருந்து தூக்கி உள்ளார். எனினும், சென்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அலுவலகத்திற்கான வாடகையை ட்விட்டர் நிறுவனம் செலுத்த தவறி விட்டது என்றும் தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மஸ்க் கூறும்போது, 300 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான பட்ஜெட் பற்றாக்குறையை தவிர்க்கவே இந்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

ட்விட்டரின் கலிபோர்னியா, சாக்ரமெண்டோ நகர தகவல் மையங்களும் அவரது நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூடப்பட்டு உள்ளன. இது ட்விட்டரில் செயற்பாட்டை பாதிக்கும் என பணியாளர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் சிக்கன நடவடிக்கை மிக அவசியம் என்று பதிலாக எடுத்து கூறப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

நன்றி தமிழன்

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...