Newsவிக்டோரியா வாகன விபத்தில் 4 இந்தியர்கள் பலி!

விக்டோரியா வாகன விபத்தில் 4 இந்தியர்கள் பலி!

-

ஜனவரி 4 அன்று, மெல்பனின் வடக்கே Sheppartonஇல் நடந்த கார் விபத்தில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட நால்வரும் ஆண்கள் எனவும், Shepparton பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் வேலைசெய்துவிட்டு நண்பரின் காரில் திரும்பிப் போய்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா பொலிஸாரின் கூற்றுப்படி, Pine Lodge North Roadஇலுள்ள ஒரு சந்தியில் மாலை 4:45 மணியளவில் Peugeot கார் ஒன்றும் Toyota Hilux ute-உம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

Peugeot இன் ஓட்டுநர் மார்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார், மற்ற வாகன ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.

Advertisement

Peugeot காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த மூவரும் seatbelt-ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகளை சிறப்பு புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...