Newsவிக்டோரியா வாகன விபத்தில் 4 இந்தியர்கள் பலி!

விக்டோரியா வாகன விபத்தில் 4 இந்தியர்கள் பலி!

-

ஜனவரி 4 அன்று, மெல்பனின் வடக்கே Sheppartonஇல் நடந்த கார் விபத்தில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட நால்வரும் ஆண்கள் எனவும், Shepparton பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் வேலைசெய்துவிட்டு நண்பரின் காரில் திரும்பிப் போய்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா பொலிஸாரின் கூற்றுப்படி, Pine Lodge North Roadஇலுள்ள ஒரு சந்தியில் மாலை 4:45 மணியளவில் Peugeot கார் ஒன்றும் Toyota Hilux ute-உம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

Peugeot இன் ஓட்டுநர் மார்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார், மற்ற வாகன ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.

Advertisement

Peugeot காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த மூவரும் seatbelt-ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகளை சிறப்பு புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள சைபர் குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் பெரிய வணிகங்களுக்கு எதிரான சைபர் குற்றம் ஒரு வருடத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றங்களால் சில வணிகங்கள் ஆண்டுக்கு $200,000...

சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக Australia Post ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

இரண்டு தபால் வரிசைப்படுத்தும் மையங்களில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து ஆஸ்திரேலிய தபால் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்தின் Townsville West End-இல் உள்ள...

ஆஸ்திரேலியாவில் மேலும் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. "காட்டுத்தீ நிலை" என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, காட்டுத்தீ...