Newsவிக்டோரியா வாகன விபத்தில் 4 இந்தியர்கள் பலி!

விக்டோரியா வாகன விபத்தில் 4 இந்தியர்கள் பலி!

-

ஜனவரி 4 அன்று, மெல்பனின் வடக்கே Sheppartonஇல் நடந்த கார் விபத்தில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட நால்வரும் ஆண்கள் எனவும், Shepparton பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் வேலைசெய்துவிட்டு நண்பரின் காரில் திரும்பிப் போய்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா பொலிஸாரின் கூற்றுப்படி, Pine Lodge North Roadஇலுள்ள ஒரு சந்தியில் மாலை 4:45 மணியளவில் Peugeot கார் ஒன்றும் Toyota Hilux ute-உம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

Peugeot இன் ஓட்டுநர் மார்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார், மற்ற வாகன ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.

Advertisement

Peugeot காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த மூவரும் seatbelt-ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகளை சிறப்பு புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...