Articleஅலாஸ்கா - ஆஸ்திரேலியா 8,435 மைல் பயணம் - கின்னஸில் இடம்பெற்ற...

அலாஸ்கா – ஆஸ்திரேலியா 8,435 மைல் பயணம் – கின்னஸில் இடம்பெற்ற பறவை!

-

சாதனைகள் மனிதர்களுக்கு புதிது, பெரிது ஆனால் வானத்துப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கு அவை பொருட்டேயில்லை. ஒரு பறவை அதன் போக்கில் நிற்காமல் 8 ஆயிரத்து 435 மைல்கள் பயணித்திருப்பதை புதிய சாதனை என்று பட்டியலிட்டுள்ளது ‘The Guinness World Records’ அமைப்பு.

பறவைகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது காலங்காலமாக நடக்கும் ஒரு செயல். இடம்பெயர்ந்து செல்லும் பழக்கம் கொண்ட பார் டெய்ல்ட் காட்விட் (Limosa lapponica) என்ற பறவையினத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பறவையின் உடலில் வைத்திருந்த சிப் மூலம் இந்த சாதனை அம்பலமாகியுள்ளது.

அலாஸ்காவில் புறப்பட்ட “234684” என்ற டேக் எண் கொண்ட அந்த பறவை 11 நாட்களில் ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியாவை அடைந்தது. இந்தப் பயணத்தின்போது இந்தப் பறவை 13,560 கிலோ மீட்டரைக் கடந்துள்ளது. அதுவும் உணவுக்காகவோ, ஓய்வுக்காகவோ எங்குமே நிற்காமல் பறந்துள்ளது. இந்தப் பறவை கடந்த தூரத்தை ஒப்பிட்டால் அது லண்டனில் இருந்து நிவ்யோர்க்குக்கு இரண்டரை முறை சென்றுவருவதற்கு சமமாகும்.

பறவையின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருந்த 5ஜி சாட்டிலைட் டேக் அதன் பயணத்தை துல்லியமாக பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்றுப் பயணம் கடந்த அக்டோபர் 13, 2022ல் தொடங்கி சரியாக 11 நாளில் முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக இதே காட்விட் இனத்தைச் சேர்ந்த பறவை 217 மைல் பறந்திருந்ததுதான் சாதனையாக பதிவாகியிருந்தது. இப்போது மீண்டும் அதே இனத்தின் பறவை இன்னொரு சாதனையை செய்துள்ளது.

சாதனைப் பறவையின் இந்த சாதனை குறித்து பர்ட்லைஃப் டாஸ்மேனியாவின் ஆராய்ச்சியாளர் எரிக் ஹோலர், “இந்தப் பறவை தனது ஓய்வற்ற பயணத்தால் தனது எடையில் பாதியை இழந்துள்ளது” என்றார்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...