Newsசொத்து மதிப்பு வீழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்தார் எலான் மஸ்க்

சொத்து மதிப்பு வீழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்தார் எலான் மஸ்க்

-

வரலாறு காணாத அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடம்பிடித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை தொட்டது முதல் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளுக்கே பெயர்பெற்று வந்த எலான் மஸ்க், தற்போது உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் கூட ஒரு எதிர்மறையான விடயத்துக்காகத்தான்.

அதாவது, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 182 பில்லியன் டொலர் வரை இழந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு தகவல்கள் இதனை 200 பில்லியன் டொலர்கள் வரை என்று தெரிவிக்கின்றன.

துல்லியமான இழப்பு தெரியவருவது அசாதாரணமானது என்றாலும், மஸ்க் இழந்திருக்கும் இழப்பானது, ஏற்கனவே பதிவான இழப்பை விட மிக அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதற்கு முன்பு, 2000ஆவது ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர் மசாயோசி 58.6 பில்லியன் டொலர்களை இழந்திருந்ததே கின்னஸ் சாதனையாக இருந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...

இந்தியாவில் பரவும் வைரஸ் கோவிட்டை விட மோசமானதா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பதிவான கொடிய Nipah வைரஸ் பரவுவதால், முழு ஆசியப் பகுதியும் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

விக்டோரியா காட்டுத்தீயில் 400 வீடுகள் எரிந்து நாசம்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ, உயிருக்கும் சொத்துக்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மாநில வரலாற்றில் மிக அதிக வெப்ப அலைக்குப் பிறகும் நிலைமை...