Newsசபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை!

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை!

-

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் திகதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

அய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இதனையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு அய்யப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா… என்ற கோஷம் எழுப்புவர்.

இந்த ஆண்டு மகர ஜோதியை காண   இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியில் குவிந்துள்ளனர். இதற்காக ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஏற்கனவே தங்கியுள்ளனர். மேலும் ஏற்கனவே மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று குவிய உள்ளனர்.

எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் பொலிஸார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 இலட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த காலங்களில் சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...