Newsசபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை!

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை!

-

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் திகதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

அய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இதனையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு அய்யப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா… என்ற கோஷம் எழுப்புவர்.

இந்த ஆண்டு மகர ஜோதியை காண   இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியில் குவிந்துள்ளனர். இதற்காக ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஏற்கனவே தங்கியுள்ளனர். மேலும் ஏற்கனவே மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று குவிய உள்ளனர்.

எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் பொலிஸார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 இலட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த காலங்களில் சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

வெளி நாடுகளில் பிறந்த ஆஸ்திரேலியர்கள் பற்றிய புதிய தகவல்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 30.7 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பிறந்த...

Anzac தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கானோர்

அன்சாக் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் நகரங்களில் உள்ள போர் நினைவுச் சின்னங்கள் மற்றும் கல்லறைகளுக்கு சூரிய உதயத்திற்கு முன் குவிந்தனர். மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற...

அவுஸ்திரேலியாவில் பாராட்டப்பட்ட இலங்கையின் பாற்சோறு!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாஸ்டர் செஃப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கைப் பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையின் பாரம்பரிய உணவு...

அமெரிக்காவில் டிக்டோக்கை தடை செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது

அமெரிக்காவில் டிக்டோக்கை தடைசெய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா டிக்டோக்கின் உரிமையாளரான பைட் டான்ஸுக்கு அதன் பங்குகளை விற்க ஒன்பது மாதங்கள்...

அவுஸ்திரேலியாவில் பாராட்டப்பட்ட இலங்கையின் பாற்சோறு!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாஸ்டர் செஃப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கைப் பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையின் பாரம்பரிய உணவு...

அமெரிக்காவில் டிக்டோக்கை தடை செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது

அமெரிக்காவில் டிக்டோக்கை தடைசெய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா டிக்டோக்கின் உரிமையாளரான பைட் டான்ஸுக்கு அதன் பங்குகளை விற்க ஒன்பது மாதங்கள்...