Newsதலை பொங்கல் விருந்தில் மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்!

தலை பொங்கல் விருந்தில் மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்!

-

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது. போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை ஆந்திராவில் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள்.

குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் இத்தகைய விருந்து வைப்பதில் புகழ் பெற்று திகழ்கிறார்கள். கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார்.

இந்த ஆண்டு எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் அந்த சாதனையை முறியடிக்க முடிவு செய்தார். அவர் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முரளிதருக்கு தலை பொங்கல் ஆகும்.

முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். நேற்று முன்தினம் அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை. என்றாலும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ள பணியிடத் தொழிலாளர்கள்

செயற்கைக் கல் பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதுபோன்ற சூழல்களில் பணிபுரியும் ஐந்து...

வேலைநிறுத்தம் செய்ய உள்ள குயின்ஸ்லாந்து ஆசிரியர்கள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 48,000 ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். குயின்ஸ்லாந்தின் 1266 அரசுப் பள்ளிகள் மற்றும் 560,000...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நாயின் அளவுள்ள எலி

ஆஸ்திரேலியாவின் Normanby-இல் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. மேலும் இந்த...

விக்டோரியன் நீதித்துறை மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்

Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது. ஒக்டோபர் 2023 இல் நடந்த...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நாயின் அளவுள்ள எலி

ஆஸ்திரேலியாவின் Normanby-இல் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. மேலும் இந்த...

விக்டோரியன் நீதித்துறை மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்

Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது. ஒக்டோபர் 2023 இல் நடந்த...