Cinemaமீண்டும் திரைக்கு வருகிறது கமலின் “ஆளவந்தான்”!

மீண்டும் திரைக்கு வருகிறது கமலின் “ஆளவந்தான்”!

-

நடிகர் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் டிஜிட்டல் பதிப்பில் மீண்டும் திரையிரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் எழுதிய ‘தாயம்’ என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆளவந்தான்’. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வித்யாசமான உளவியல் சிக்கலை பேசும் திரைக்கதையில் உலக நாயகன் கமல் ஹாசன் இரு வேடங்களில் நடித்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு மாதிரி தோரணையில் நடிப்பை வெளிபடுத்தி மிரட்டியிருப்பார்.

மேலும் இப்படம் பிரம்மாண்டமாகவும் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதால் படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள், கருவிகள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு படமாக்கியிருப்பார்கள். அனிமேஷன் காட்சிகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று இந்திய சினிமாவில் தனித்துவமான முயற்சியில் இறங்கி பார்வையாளர்களுக்கு வித்யாசமான மற்றும் பிரம்மாண்டமான உணர்வை கொடுப்பதற்காக படக்குழு இறங்கியது.

இருப்பினும், அப்போதைய சூழலில் படக்குழுவினர் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் ஆளவந்தான் படத்தை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என நீண்ட நாள்களாகவே கோரிக்கை எழுந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, 22 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஆளவந்தான் படத்தை விரைவில் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இணைந்துள்ள இலங்கை பொறியாளர்

அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் நிறுவனங்களின் சர்வதேச பல்கலைக்கழகம் RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இலங்கை பொறியாளர் ஒருவரும் இணைந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பொறியாளர்கள் குழுவின்...

மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ள விண்கலம்

பல மாதங்களாக செயல்படாமல் இருந்த Voyager-1 விண்கலம் மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து படிக்கக்கூடிய தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. Voyager-1 ஆய்வு பல மாதங்களாக செயலிழந்த பிறகு...

உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் இடம்பிடித்துள்ள இலங்கைப் பெண்

டைம்ஸ் சஞ்சிகையால் பெயரிடப்பட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் இலங்கைப் பெண்ணான ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் சமற்கிருத சமூகத்திற்காக உரத்த...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா ஐஸ் போதைப்பொருளுக்கு உலகில் அதிக லாபம் ஈட்டும் சந்தையாகக் கருதப்படுவதோடு, பனிக்கட்டிகளுக்கு மேலதிகமாக,...

தடைசெய்யப்பட்ட சிட்னி கேசினோ கிளப்பிற்கு பச்சை விளக்கு

தடை செய்யப்பட்ட கிரவுன் கேசினோ கிளப் மீண்டும் திறக்கப்படுவதற்கு சில சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் சூதாட்ட விடுதியாக...

ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களுக்கு வேலை தேடுவதற்கான வழிகாட்டி

அவுஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டின் வேலைச் சந்தையில் புதிய வேலைவாய்ப்பை விரைவாகக் கண்டறிய தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பல வேலை வாய்ப்புகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை,...