Newsபாகிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

பாகிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

-

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் பொலிஸ் குடியிருப்புகள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டுகள் வெடித்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த பலர் உடல் சிதறி பலியாகினர். மேலும் குண்டுவெடிப்பில் பள்ளிவாசலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். இதனிடையே உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதல் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100- ஆக உயர்ந்துள்ளது.

பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானி தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உமர் காலித் குராசானி கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததற்கு பழிவாங்கும் வகையில் பள்ளிவாசலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக உமர் காலித் குராசானியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து மக்களுக்கு வானிலை எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பவழக்கடலில் நகர்ந்து செல்வதால்...

அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை செய்யப்போகின்றவர்களுக்கும் ஏற்படவுள்ள பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்காக நோயாளி 21 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் எதிர் தாக்குதல்

ஈரானில் பல அணுமின் நிலையங்கள் உள்ள நகரம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம்...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

மெல்போர்ன் பெண்கள் பள்ளி மாணவிகள் குழுவிற்கு நிகழ்ந்த அநீதி

மெல்போர்னில் உள்ள பெண்கள் பள்ளி மாணவிகள் தோலின் நிறம் காரணமாக பள்ளி புகைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் தோல் நிறம் மற்றும் மதம் காரணமாக...