விக்டோரிய மாநிலமானது 16 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தனது இரண்டு (Vic Metro மற்றும் Vic Country) அணிகளைக் கடந்த நவம்பர் மாதம் தெரிவு செய்திருந்தது.
தலா பதின்மூன்று பேர் கொண்ட அவ்விரு அணிகளிலும் நம்மவர்கள் இருவர் தெரிவாகி விளையாடிவருகின்றனர்.
அந்த இளம் தமிழ்ப் பெண்களான திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் ஆகியோர் ஆவர்.
திவ்யா மகேந்திரன் Vic Country அணிக்காகவும், ஷிவானி நரேந்திரன் Vic Metro அணிக்காகவும் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திவ்யா மகேந்திரன் 2014ம் ஆண்டிலிருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
சிறுவயதில் தன் தந்தையுடன் கிரிக்கெட் பார்ப்பதில் ஆரம்பித்ததாம் இருவருடைய கிரிக்கெட் ஆர்வம்.
பொதுவாக இலங்கை மற்றும் இந்திய பின்னணி கொண்ட குடும்பம்இ தன் குழந்தைகளின் படிப்பை மட்டுமே முக்கியமாக கருதும். ஆனால் திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் ஆகியோரின் குடும்பங்கள் தன் பிள்ளைகளின் படிப்பை தொடர்ந்து விளையாட்டிலும் உதவிசெய்து உறுதுணையாக இருப்பது பாராட்டத்தக்கது.
திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் இருவருக்கும் தமிழ் ஆஸ்திரேலியன் சார்பாக வாழ்த்துக்கள்.