Newsவயதான எலி படைக்க போகும் கின்னஸ் சாதனை!

வயதான எலி படைக்க போகும் கின்னஸ் சாதனை!

-

எலிகளின் ஆயுள் பொதுவாக அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும்.ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது.

இந்த எலியே, இதுவரை உலகில் வாழ்ந்த எலிகளில் அதிக வயதுடைய எலி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த எலி தொடர்பான விஷயங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பசிபிக் பாக்கெட் எலி இப்போது உலகிலேயே மிக வயதான எலி என்று நம்பப்படுகிறது. உலகிலேயே மிகவும் அதிக நாள் வாழ்ந்த எலி என்று நம்பப்படும் பசிபிக் பாக்கெட் எலிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைக்கப் போவதாக சான் டியாகோ உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013ம் ஆண்டு ஜூலை 12ம் திகதியன்று உயிரியல் பூங்காவில் பிறந்த எலிக்கு, நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் நினைவாக பாட் என்று பெயரிடப்பட்டது. இந்த சிறப்பான எலியின் நீண்ட ஆயுளைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 8 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தப்போவதாக வனவிலங்குக் கூட்டமைப்பு கூறியது.

மனிதப் பராமரிப்பில் வாழும் பழமையான எலி என்ற கின்னஸ் உலக சாதனையும் இந்த எலி பெறும் என்று கூறப்படுகிறது. இந்த எலியின் வயதை சரிபார்க்க புறுசு நடுவர் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

பசிபிக் பாக்கெட் மவுஸ் என்பது வட அமெரிக்காவில் உள்ள எலிகளின் மிகச்சிறிய இனமாகும், அருகி வரும் இந்த இனத்தின் வீழ்ச்சியை ஈடுசெய்ய உதவும் வகையில் 2012 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலையானது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை நிறுவியது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...