Newsவயதான எலி படைக்க போகும் கின்னஸ் சாதனை!

வயதான எலி படைக்க போகும் கின்னஸ் சாதனை!

-

எலிகளின் ஆயுள் பொதுவாக அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும்.ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது.

இந்த எலியே, இதுவரை உலகில் வாழ்ந்த எலிகளில் அதிக வயதுடைய எலி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த எலி தொடர்பான விஷயங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பசிபிக் பாக்கெட் எலி இப்போது உலகிலேயே மிக வயதான எலி என்று நம்பப்படுகிறது. உலகிலேயே மிகவும் அதிக நாள் வாழ்ந்த எலி என்று நம்பப்படும் பசிபிக் பாக்கெட் எலிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைக்கப் போவதாக சான் டியாகோ உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013ம் ஆண்டு ஜூலை 12ம் திகதியன்று உயிரியல் பூங்காவில் பிறந்த எலிக்கு, நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் நினைவாக பாட் என்று பெயரிடப்பட்டது. இந்த சிறப்பான எலியின் நீண்ட ஆயுளைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 8 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தப்போவதாக வனவிலங்குக் கூட்டமைப்பு கூறியது.

மனிதப் பராமரிப்பில் வாழும் பழமையான எலி என்ற கின்னஸ் உலக சாதனையும் இந்த எலி பெறும் என்று கூறப்படுகிறது. இந்த எலியின் வயதை சரிபார்க்க புறுசு நடுவர் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

பசிபிக் பாக்கெட் மவுஸ் என்பது வட அமெரிக்காவில் உள்ள எலிகளின் மிகச்சிறிய இனமாகும், அருகி வரும் இந்த இனத்தின் வீழ்ச்சியை ஈடுசெய்ய உதவும் வகையில் 2012 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலையானது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை நிறுவியது.

நன்றி தமிழன்

Latest news

 மரண ஆபத்தை ஏற்படுத்தும் CellAED இயந்திரம் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் பணியிடங்களில் அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 'CellAED' வகை Defibrillatorsகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தின் சரிவு...

அடுத்த வாரம் 2 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ள Samsung

Samsung தனது சமீபத்திய Galaxy A17 5G Smartphone மற்றும் Galaxy Tab A11+ டேப்லெட்டை வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அறிமுகப்படுத்தப்போவதாக...

போதைப்பொருட்களால் உயிரை மாய்த்துக் கொண்டு உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் ஆஸ்திரேலியர்

தன்னார்வ மரணத்தைத் தூண்டுவதற்காக மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, தனது உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் நபராக ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் உருவெடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. கரேன் டங்கன்...

ஆபாச படங்களை உருவாக்குவதாக Grok AI நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு

எலான் மஸ்க்கின் Grok என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய ஆடைகளை டிஜிட்டல் முறையில் அகற்றியதாக கூறி, ஒரு பெண் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார் இது...

சிட்னியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

ஆஷஸ் போட்டியின் முதல் நாளுக்கு முன்னதாக, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை ரோந்து செல்ல, அதிக ஆயுதம் ஏந்திய நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரின் ஒரு...

அரசாங்க வலைத்தளத்தை ஹேக் செய்த பிரிட்டிஷ் ஹேக்கருக்கு ஆஸ்திரேலியா வழங்கிய சிறப்பு விசா

ஒரு தனிநபர் பெறுவதற்கு மிகவும் கடினமான ஆஸ்திரேலிய விசா வகைகளில் ஒன்றை பிரிட்டிஷ் ஹேக்கர் ஒருவர் பெற முடிந்தது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இணைய அமைப்பில் ஒரு முக்கியமான...