Cinemaமூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்!

மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்!

-

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று (02) நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1965ஆம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான “ஆத்ம கௌரவம்” படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார்.

தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ’விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

விக்டோரியா காட்டுத்தீ காரணமாக 1,000 வீட்டு மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

மிரட்டல் காரணமாக போராட்டக்காரர்கள் குழுவை கலைத்த போலீசார்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படையெடுப்பு தின ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை போலீசார் கலைத்துள்ளனர். பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை...