Newsஇதுபோன்ற பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது சாத்தியமற்றது - துருக்கி ஜனாதிபதி

இதுபோன்ற பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது சாத்தியமற்றது – துருக்கி ஜனாதிபதி

-

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

நிலநடுக்கத்தால் தற்போதைய நிலவரப்படி துருக்கியில் 9 ,057 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 2, 992 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12, 0 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகள், நிலநடுக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி தாயூப் எர்டோகன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

அவர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. கடும் விமர்சனங்களை தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையமாக இருந்த ஹரமனமராஸ் நகரில் ஜனாதிபதி எர்டோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

நன்றி தமிழன்

Latest news

தேசிய பூங்காக்களுக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க நியூசிலாந்து முடிவு

அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளைத் தேடுவதால், நியூசிலாந்து தனது மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களான Milford Track மற்றும் Mount Cook ஆகியவற்றைப் பார்வையிட...

கோலாக்களைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு

ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் கோலாக்களைப் பாதுகாக்க ஒரு புதிய தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் தென்மேற்கே அமைந்துள்ள லாங் பாயிண்ட் மற்றும் அப்பின் இடையே இதற்காக சுமார்...

ஆஸ்திரேலியர்களுக்கு $300 தடுப்பூசியை இலவசமாக வழங்குமாறு அழுத்தம் 

நாடு முழுவதும் மிகவும் தொற்றும் வைரஸிற்கான வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்களுக்கு $300 மதிப்புள்ள RSV தடுப்பூசியை இலவசமாக்க மத்திய அரசை...

Wagga Wagga அருகே தாக்குதலில் உயிரிழந்த 84 வயது முதியவர்

Wagga Wagga அருகே உள்ள ஒரு வீட்டில் 84 வயது முதியவரும் அவரது 82 வயது மனைவியும் அவர்களுக்குத் தெரிந்த ஒருவரால் தாக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குப்...

ஆஸ்திரேலியர்களுக்கு $300 தடுப்பூசியை இலவசமாக வழங்குமாறு அழுத்தம் 

நாடு முழுவதும் மிகவும் தொற்றும் வைரஸிற்கான வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்களுக்கு $300 மதிப்புள்ள RSV தடுப்பூசியை இலவசமாக்க மத்திய அரசை...

Wagga Wagga அருகே தாக்குதலில் உயிரிழந்த 84 வயது முதியவர்

Wagga Wagga அருகே உள்ள ஒரு வீட்டில் 84 வயது முதியவரும் அவரது 82 வயது மனைவியும் அவர்களுக்குத் தெரிந்த ஒருவரால் தாக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குப்...