Newsஇதுபோன்ற பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது சாத்தியமற்றது - துருக்கி ஜனாதிபதி

இதுபோன்ற பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது சாத்தியமற்றது – துருக்கி ஜனாதிபதி

-

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

நிலநடுக்கத்தால் தற்போதைய நிலவரப்படி துருக்கியில் 9 ,057 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 2, 992 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12, 0 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகள், நிலநடுக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி தாயூப் எர்டோகன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

அவர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. கடும் விமர்சனங்களை தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையமாக இருந்த ஹரமனமராஸ் நகரில் ஜனாதிபதி எர்டோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் மின் கட்டணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் மின் கட்டணம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தையின் சமீபத்திய அறிக்கை...

ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முதல் 5 மொழிகள் இதோ!

ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்ற முதல் 5 வெளிநாட்டு மொழிகள் பெயரிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியர்களிடையே மாண்டரின் மிகவும் பொதுவான மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில்...

வெளி நாடுகளில் பிறந்த ஆஸ்திரேலியர்கள் பற்றிய புதிய தகவல்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 30.7 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பிறந்த...

Anzac தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கானோர்

அன்சாக் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் நகரங்களில் உள்ள போர் நினைவுச் சின்னங்கள் மற்றும் கல்லறைகளுக்கு சூரிய உதயத்திற்கு முன் குவிந்தனர். மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற...

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் மின் கட்டணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் மின் கட்டணம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தையின் சமீபத்திய அறிக்கை...

மெல்போர்ன் பெண்களைப் பாதுகாக்க மத்திய அரசின் அழைப்பு

விக்டோரியாவில் பெண்கள் பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. மெல்போர்ன் இரண்டு குழந்தைகளின் தாயான ஜேட் ஹோவர்ட்,...