Newsகைலாசாவில் இலவச குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் - நித்யானந்தா அறிவிப்பு

கைலாசாவில் இலவச குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் – நித்யானந்தா அறிவிப்பு

-

நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், ஜெனிவாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.நா.மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கைலாசா பெண் பிரதிநிதிகள் பேசிய உரை ஏற்றுக்கொள்ளப்படாது என ஐ.நா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கைலாசா நாட்டிற்கு ஐ.நா.சபை அங்கீகாரம் அளித்துள்ளதா என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் கைலாசா பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் நித்யானந்தா அவற்றை பற்றி கவலைப்படவில்லை.

மாறாக கைலாசா பற்றிய புதிய அறிவிப்புகளை அறிவித்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில் நித்யானந்தா நிறுவி உள்ள கைலாசாவிற்கு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளார். மேலும் கைலாசாவின் ஐக்கிய மாகாணங்களில் இலவச மின்குடியுரிமைக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம் என கைலாசாவின் சமூகவலைத்தள பக்கங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், உலகம் எங்கிலும் உள்ள இந்துக்களுக்கு என்று உருவாகி இருக்கும் நாடு கைலாசா. எனவே உலகம் எங்கிலும் உள்ள இந்துக்கள் கைலாசாவின் குடியுரிமை பெற வேண்டும். அதனால் அவர்கள் இ-குடியுரிமை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த இ-குடியுரிமை பெறுவதற்காக https://kailaasa.org/e-citizen/ என்ற சிறப்பு இணைய தளமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. https://kailaasa.org/e-citizen/ என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து விபரங்களை பூர்த்தி செய்தால் கைலாசா நாட்டின் இ-குடியுரிமையை பெறலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...