Newsகைலாசாவில் இலவச குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் - நித்யானந்தா அறிவிப்பு

கைலாசாவில் இலவச குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் – நித்யானந்தா அறிவிப்பு

-

நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், ஜெனிவாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.நா.மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கைலாசா பெண் பிரதிநிதிகள் பேசிய உரை ஏற்றுக்கொள்ளப்படாது என ஐ.நா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கைலாசா நாட்டிற்கு ஐ.நா.சபை அங்கீகாரம் அளித்துள்ளதா என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் கைலாசா பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் நித்யானந்தா அவற்றை பற்றி கவலைப்படவில்லை.

மாறாக கைலாசா பற்றிய புதிய அறிவிப்புகளை அறிவித்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில் நித்யானந்தா நிறுவி உள்ள கைலாசாவிற்கு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளார். மேலும் கைலாசாவின் ஐக்கிய மாகாணங்களில் இலவச மின்குடியுரிமைக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம் என கைலாசாவின் சமூகவலைத்தள பக்கங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், உலகம் எங்கிலும் உள்ள இந்துக்களுக்கு என்று உருவாகி இருக்கும் நாடு கைலாசா. எனவே உலகம் எங்கிலும் உள்ள இந்துக்கள் கைலாசாவின் குடியுரிமை பெற வேண்டும். அதனால் அவர்கள் இ-குடியுரிமை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த இ-குடியுரிமை பெறுவதற்காக https://kailaasa.org/e-citizen/ என்ற சிறப்பு இணைய தளமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. https://kailaasa.org/e-citizen/ என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து விபரங்களை பூர்த்தி செய்தால் கைலாசா நாட்டின் இ-குடியுரிமையை பெறலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா

ராணுவத் தலையீடு தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் கடற்படையின் வளைகுடா பகுதியில் சீன போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் நடத்திய ராணுவ பயிற்சியே...

ஆபாசமான இணையதளங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற புதிய வழிமுறை

இணையத்தில் குழந்தைகள் ஆபாசமான படங்களை பார்ப்பதை குறைக்கும் நோக்கில் சில புதிய நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய திட்டங்களின்படி, இணையதளத்தை அணுகும்போது வயது...

சர்வதேச மாணவர்களுக்கான புதிய விதிகளுக்கு எதிராக உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகத் துறை எச்சரித்துள்ளது. நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச கல்வி கவுன்சில் கூடியபோது,...

இன்றைய மத்திய பட்ஜெட் பற்றிய ஒரு கணிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 2 அல்லது 3 சதவீத இலக்கை எட்டும் என்று கருவூலம் கணித்துள்ளது. இன்றைய மத்திய பட்ஜெட் எதிர்பார்த்ததை விட ஓராண்டு முன்னதாகவே...

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஆண்டு காய்ச்சல் சீசன்...

உலகின் 10 பணக்கார பெண்களின் சொத்துக்கள் பற்றி வெளியான தகவல்

இந்த ஆண்டு மே மாதத்திற்குள், ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் 10 பணக்கார பெண்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் பணக்கார பெண்கள் மற்றும் அவர்களின்...