Newsபூமியின் மையத்தை ஆராய்ந்தவர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி

பூமியின் மையத்தை ஆராய்ந்தவர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி

-

பூமியின் மையத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடிக்காத புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளனர்.

நமது பூமியின் மையத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான்.

சமீபத்தில் இந்த நெருப்பு கோளம் குறித்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியானது.

இந்த கோளம் தனியாக உட்பகுதியில் சுற்றிக்கொண்டு இருக்கும். அதாவது ஒரு பந்துக்குள் இன்னொரு பந்து இருப்பதைப் போன்றது.

மேலே இருக்கும் பந்து ஒரு வேகத்தில் சுற்றுகிறது. உள்ளே இருக்கும் பந்து இன்னொரு வேகத்தில் சுற்றுகிறது. அப்படிதான் பூமியின் மையத்தில் இருக்கும் இந்த கோளமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. 

இந்த நிலையில் பூமி மையத்தில் இருக்கும் கோளத்திற்கு உள்ளே இன்னொரு கோளம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். 

Nature Communications என்ற ஆய்வு பத்திரிகையில் வெளியாகி இருக்கும் கட்டுரையில் இந்த தகவல் இடம்பெற்று உள்ளது. 

தற்போது வரை பூமியில் crust அதாவது வெளிப்பகுதி, mantle என்ற உட்பகுதி , outer core என்ற உட்கோளத்திற்கு மேலே இருக்கும் பகுதி, கடைசியாக inner core என்று அழைக்கப்படும் மையப்பகுதி உட்கோளம்.

பூமியில் இதுவரை இந்த 4 லேயர்கள்தான் இருந்தன. தற்போது 5வதாக ஒரு லேயர் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது உட்கோளத்தின் மையத்தில் இன்னொரு கோளம் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோளம் மர்ம உலோகம் ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர். 

மிக தெளிவாக உள்ளே ஒரு உலோகம் இருப்பதை இவர்கள் கண்டுபிடித்து உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த உலோகத்தின் பண்புகள் தெரியவில்லை. அந்த மைய உலோகம் சுற்றுகிறதா என்றும் இதுவரை தெரியவில்லை அதை பற்றி தற்போதுதான் ஆய்வு செய்து வருகிறோம். வரும் ஆண்டுகளில் அதன் பண்புகள் தெரிய வரும் என்று இந்த ஆய்வை நடத்திய கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தான்-சன் பாம் தெரிவித்துள்ளார். 

Latest news

ஆஸ்திரேலியாவில் மேலும் குறைக்கப்படும் கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 62% முதல் 70% வரை குறைக்கும் இலக்கை ஐக்கிய நாடுகள்...

Dezi Freeman-ஐ தேட ஆஸ்திரேலியா வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கை

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் Dezi Freeman-ஐ தேடும் பணி இப்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது. காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில்...

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மூடப்படும் மேலும் 4 தபால் நிலையங்கள்

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மேலும் நான்கு தபால் நிலையங்களை மூட ஆஸ்திரேலியா தபால் துறை முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் உள்ளூர்வாசிகள் மிகவும் கோபமடைந்துள்ளனர் மற்றும் இதற்கு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...