Newsநாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு ஆஸ்திரேலியா PR வழங்க...

நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு ஆஸ்திரேலியா PR வழங்க திட்டம்

-

டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட மகன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருந்த இந்தியக் குடும்பத்துக்கு இந்நாட்டில் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸின் நேரடித் தலையீட்டால், அவர்களுக்கு அவுஸ்திரேலிய வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்த குழந்தையின் சுகாதார வசதிகளுக்காக 10 ஆண்டுகளில் செலவிடப்படும் தொகை சுமார் 664,000 டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்தத் தொகையை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்தக் குடும்பத்திற்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின.

குறித்த குழந்தையின் பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவிற்கு இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு மிக அவசியமான துறைகளில் பணியாற்றுவதும் விசேட அம்சமாகும்.

Latest news

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தடுப்பூசி...

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும்  போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" என்ற பதாகையின் கீழ் அமெரிக்கா முழுவதும் மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நாடு...

சர்வதேச மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் உயர்தர பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கான புதிய கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்த அல்பானீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்...