News நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு ஆஸ்திரேலியா PR வழங்க...

நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு ஆஸ்திரேலியா PR வழங்க திட்டம்

-

டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட மகன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருந்த இந்தியக் குடும்பத்துக்கு இந்நாட்டில் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸின் நேரடித் தலையீட்டால், அவர்களுக்கு அவுஸ்திரேலிய வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்த குழந்தையின் சுகாதார வசதிகளுக்காக 10 ஆண்டுகளில் செலவிடப்படும் தொகை சுமார் 664,000 டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்தத் தொகையை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்தக் குடும்பத்திற்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின.

குறித்த குழந்தையின் பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவிற்கு இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு மிக அவசியமான துறைகளில் பணியாற்றுவதும் விசேட அம்சமாகும்.

Latest news

இங்கிலாந்தில் வாழும் இந்து மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில்,...

கொசுக்கடியால் கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!

கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். அது ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது என்பதை பிரித்தானியாவில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது....

“கவலைப்படாதே சகோதரா”- நியூசிலாந்து அரசின் புதிய பிரசாரம்!

காதல் தோல்வியகளிலிருந்து இளைஞர்கள் மீண்டுவர “LOVE BETTER” என்ற பிரசாரத்தை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு...

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

மெட்டா நிறுவனம் தொடர்பில் பெண் ஊழியர் பகிர்ந்த அனுபவம்

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு...

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம் – விஞ்ஞானிகள் தெரிவித்த முக்கிய விடயம்

இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று வானியல் விஞ்ஞானிகள் கேட்கின்றனர்?அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?...