Newsஉக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 6 பேர் பலி!

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 6 பேர் பலி!

-

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகின்றது.

இதனால் உலகளவில் பொருளாதாரத்திலும், விநியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆனாலும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உக்ரைனில் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கிலான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின.

11 பேர் கொல்லப்பட்டனர். ஏவுகணை மழை அதன்பிறகு நேற்று அதிகாலை நேரத்தில் உக்ரைனின் மின்சக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

வடக்கில் கார்கிவ் நகரம் தொடங்கி தெற்கே ஒடேசா, மேற்கில் ஜைட்டோமிர் நகரம் வரையிலும் ஏவுகணைகள் மழையாகப் பொழிந்தன.

கார்கிவிலும், ஒடேசாவிலும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பல பகுதிகளில் மின்கட்டமைப்புகள் பெருத்த சேதத்துக்கு ஆளானதால் அவை இருளில் மூழ்கின.

தலைநகர் கீவிலும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சமீப காலத்தில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் இதுதான் என்று உக்ரைன் தெரிவித்தது.

அதே நேரத்தில் ரஷ்யாவின் 34 ஏவுகணைகளையும், ஈரான் தயாரிப்பான ஷாகித் டிரோன்கள் 4-ஐயும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்தது.

மேற்கு உக்ரைனில் லிவிவ் நகரில் ஒரு வீட்டின் மீது ஏவுகணை விழுந்து தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தகவலை அந்த பிராந்தியத்தின் கவர்னர் மாக்சிம் கோஜிட்ஸ்கி சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார். டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் ஏவுகணை, டிரோன்தாக்குதலில் ஒருவர் பலியானார்.

5 பேர் படுகாயம் அடைந்தனர். கீவ் நகரில் தொடர்ந்து வான்தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் விடிய விடிய ஒலித்ததாக தெரிய வந்துள்ளது.

அங்கு ஏவுகணை மற்றும் வெடிக்கும் டிரோன்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் பல வழிமறித்துத் தாக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு மின்சக்தி கட்டமைப்புகள் பாதிப்புக்குள்ளானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியர்களுக்கு 50 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கும் Meta

311,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு Meta 50 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Cambridge Analytica தனிப்பட்ட தரவு மீறல் தொடர்பான சட்ட ஒப்பந்தத்தின்...

வணிக குற்றங்களை சமாளிக்க NSW அரசின் புதிய உத்தி

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு புதிய உத்தியை வெளியிட்டுள்ளது. "Operation Percentile" என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நடவடிக்கை, NSW...

தெற்கு ஆஸ்திரேலிய மீனவர்களுக்கு புதிய மீன்பிடி கட்டுப்பாடுகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பொழுதுபோக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். மேலும் Spencer வளைகுடா மற்றும்...

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 19 வயது ஓட்டுநர்

மேற்கு கிப்ஸ்லாந்தின் Buln Buln-ஐ சேர்ந்த 19 வயது ஓட்டுநர் ஒருவர் மீது வேகமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு McFlurry காரை ஓட்டிச்...

வணிக குற்றங்களை சமாளிக்க NSW அரசின் புதிய உத்தி

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு புதிய உத்தியை வெளியிட்டுள்ளது. "Operation Percentile" என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நடவடிக்கை, NSW...

தெற்கு ஆஸ்திரேலிய மீனவர்களுக்கு புதிய மீன்பிடி கட்டுப்பாடுகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பொழுதுபோக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். மேலும் Spencer வளைகுடா மற்றும்...