Newsஉக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 6 பேர் பலி!

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 6 பேர் பலி!

-

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகின்றது.

இதனால் உலகளவில் பொருளாதாரத்திலும், விநியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆனாலும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உக்ரைனில் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கிலான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின.

11 பேர் கொல்லப்பட்டனர். ஏவுகணை மழை அதன்பிறகு நேற்று அதிகாலை நேரத்தில் உக்ரைனின் மின்சக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

வடக்கில் கார்கிவ் நகரம் தொடங்கி தெற்கே ஒடேசா, மேற்கில் ஜைட்டோமிர் நகரம் வரையிலும் ஏவுகணைகள் மழையாகப் பொழிந்தன.

கார்கிவிலும், ஒடேசாவிலும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பல பகுதிகளில் மின்கட்டமைப்புகள் பெருத்த சேதத்துக்கு ஆளானதால் அவை இருளில் மூழ்கின.

தலைநகர் கீவிலும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சமீப காலத்தில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் இதுதான் என்று உக்ரைன் தெரிவித்தது.

அதே நேரத்தில் ரஷ்யாவின் 34 ஏவுகணைகளையும், ஈரான் தயாரிப்பான ஷாகித் டிரோன்கள் 4-ஐயும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்தது.

மேற்கு உக்ரைனில் லிவிவ் நகரில் ஒரு வீட்டின் மீது ஏவுகணை விழுந்து தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தகவலை அந்த பிராந்தியத்தின் கவர்னர் மாக்சிம் கோஜிட்ஸ்கி சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார். டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் ஏவுகணை, டிரோன்தாக்குதலில் ஒருவர் பலியானார்.

5 பேர் படுகாயம் அடைந்தனர். கீவ் நகரில் தொடர்ந்து வான்தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் விடிய விடிய ஒலித்ததாக தெரிய வந்துள்ளது.

அங்கு ஏவுகணை மற்றும் வெடிக்கும் டிரோன்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் பல வழிமறித்துத் தாக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு மின்சக்தி கட்டமைப்புகள் பாதிப்புக்குள்ளானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நன்றி தமிழன்

Latest news

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

சிட்னியில் கயிற்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கூன் முதுகு திமிங்கலம்

சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள தெற்கு கடலில் கயிற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஒரு கூன் முதுகு திமிங்கலம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய Cetaceans...