News100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டெடுத்த வடகொரியா

100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டெடுத்த வடகொரியா

-

வடகொரியாவில் கட்டுமான பணியின்போது கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

கொரிய போர் கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடைபெற்ற போர் கொரிய போர் என்று அழைக்கப்படுகின்றது. 

இந்த போரில் இருநாடுகளுக்குமே வெளிநாடுகளின் ஆதரவு இருந்தது. வடகொரியாவை சீனா மற்றும் அப்போதைய சோவியத் ஒன்றியம் ஆதரித்தது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஆதரவு அளித்தன. 

குறிப்பாக இந்த போரில் தென்கொரியாவுக்கு பெரும் பக்கபலமாக இருந்த அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் வடகொரியா மீது ஏராளமான குண்டுகளை வீசின. அதிகமான குண்டுகள் 2-ம் உலகப்போரின் போது ஒட்டுமொத்த கிழக்கு ஆசியாவிலும் வீசியதைவிட அதிகமான குண்டுகளை வடகொரியா மீது அமெரிக்கா வீசியதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட கொரிய போர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பியாங்யாங்கில் 50 ஆயிரம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை சமீபத்தில் தொடங்கிவைத்த நிலையில், கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

110 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு அப்படி பியாங்யாங்கில் உள்ள ஒரு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக குழி தோண்டியபோது அங்கு 110 வெடிகுண்டுகள், பீரங்கி குண்டுகள், கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 

அவை இனைத்தும் கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டன. 

செயலிழக்க செய்தனர் பின்னர் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர். 

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில், வடகொரியாவில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...