News100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டெடுத்த வடகொரியா

100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டெடுத்த வடகொரியா

-

வடகொரியாவில் கட்டுமான பணியின்போது கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

கொரிய போர் கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடைபெற்ற போர் கொரிய போர் என்று அழைக்கப்படுகின்றது. 

இந்த போரில் இருநாடுகளுக்குமே வெளிநாடுகளின் ஆதரவு இருந்தது. வடகொரியாவை சீனா மற்றும் அப்போதைய சோவியத் ஒன்றியம் ஆதரித்தது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஆதரவு அளித்தன. 

குறிப்பாக இந்த போரில் தென்கொரியாவுக்கு பெரும் பக்கபலமாக இருந்த அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் வடகொரியா மீது ஏராளமான குண்டுகளை வீசின. அதிகமான குண்டுகள் 2-ம் உலகப்போரின் போது ஒட்டுமொத்த கிழக்கு ஆசியாவிலும் வீசியதைவிட அதிகமான குண்டுகளை வடகொரியா மீது அமெரிக்கா வீசியதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட கொரிய போர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பியாங்யாங்கில் 50 ஆயிரம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை சமீபத்தில் தொடங்கிவைத்த நிலையில், கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

110 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு அப்படி பியாங்யாங்கில் உள்ள ஒரு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக குழி தோண்டியபோது அங்கு 110 வெடிகுண்டுகள், பீரங்கி குண்டுகள், கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 

அவை இனைத்தும் கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டன. 

செயலிழக்க செய்தனர் பின்னர் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர். 

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில், வடகொரியாவில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

டிரம்பின் கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக உள்ள சர்வதேச மாணவர் கட்டுப்பாடுகள்

சர்வதேச மாணவர்கள் மீதான ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அமெரிக்க கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வரிகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Deepfake Photo செயலிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகளுக்கு Nudify செயலிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் Deepfake படங்கள் பற்றிய அறிக்கைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக...

ஆஸ்திரேலிய பணியிடங்களில் அதிகரித்துள்ள சுய பரிசோதனை மருந்து கருவிகளுக்கான தேவை

ஆஸ்திரேலிய பணியிடங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், தனிப்பட்ட போதைப்பொருள் சுய பரிசோதனை கருவிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, cocaine,...

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலை சிங்கத்தால் கையை இழந்த பெண்

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலையில் சிங்கம் தாக்கியதில் 50 வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் Toowoomba-இற்கு அருகிலுள்ள பிரபலமான...

பிரபல சமையல் கலை நிபுணர் Peter Russell-Clarke காலமானார்

அன்புடன் சமைக்கும் கலையைக் கற்றுக் கொடுத்த பிரபல சமையல் கலை நிபுணர் Peter Russell-Clarke காலமானார். அவர் இறக்கும் போது 89 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. Peter Russell-Clarke...

சிறப்பு உணவுகளின் விலைகளை உயர்த்தும் இரு பெரிய பல்பொருள் அங்காடிகள்

Coles மற்றும் Woolworths-இல் விற்கப்படும் பிரபலமான பிரதான உணவான paprikaவின் விலை அதிகரிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் மிளகுத்தூளின் மொத்த விலை சுமார்...