Newsஅமெரிக்காவில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக இந்தியர்கள் இருவர் நியமனம்

அமெரிக்காவில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக இந்தியர்கள் இருவர் நியமனம்

-

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். 

இவர்கள் அரசின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பல்வேறு அரசாங்க துறைகளில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்கினை வகித்து வருகின்றனர். 

இதுவரை 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அரசு நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது தனது நிர்வாகத்தில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக 14 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளார். 

இதில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒருவரது பெயர் ரேவதி அத்வைதி. மற்றொருவர் பெயர் மனீஷ் பாப்னா. இவர்களில் ரேவதி அத்வைதி பிளக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். 

எம்.பி.ஏ. படித்து உள்ள இவர் 2019-ம் ஆண்டில் உற்பத்தியில் புதிய சகாப்தம் படைத்தார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இவர் இதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்ட ஈட்டனின் மின்சார துறை வணிகத்திற்கான தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் இருந்தார். 

இவர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பார்ச்சூனின் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக திகழ்ந்தார். அதற்கான பட்டியலிலும் அவர் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மற்றொரு இந்தியரான மனீஷ் பாப்னா இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார். 

இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மற்றும் மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் அரசியல், பொருளாதார வளர்ச்சியில் முதுகலைப்பட்டங்களையும் எம்.ஐ.டியில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.

நன்றி தமிழன்

Latest news

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு – மூவர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டின்...

பிரிட்டனின் புதிய பாஸ்போர்ட் விதிகள் – இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிக்கல்கள்

பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடவுச்சீட்டு விதிகள் காரணமாக பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் இருந்து திரும்ப பெறப்பட்ட குழந்தைகள் பொம்மை

Aldi கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான சீட்டாட்டம் ஒன்று உடனடியாக திரும்பப் பெறப்பட்டது. ஏனெனில் அது குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. "Orchard...

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தன்று பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டதாக PhD மாணவர் மீது குற்றம்

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் Molotov cocktail தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 24 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கோல்ட் கோஸ்ட் பகுதியில் திங்கட்கிழமை ஒரு...