Newsஅமெரிக்காவில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக இந்தியர்கள் இருவர் நியமனம்

அமெரிக்காவில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக இந்தியர்கள் இருவர் நியமனம்

-

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். 

இவர்கள் அரசின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பல்வேறு அரசாங்க துறைகளில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்கினை வகித்து வருகின்றனர். 

இதுவரை 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அரசு நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது தனது நிர்வாகத்தில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக 14 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளார். 

இதில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒருவரது பெயர் ரேவதி அத்வைதி. மற்றொருவர் பெயர் மனீஷ் பாப்னா. இவர்களில் ரேவதி அத்வைதி பிளக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். 

எம்.பி.ஏ. படித்து உள்ள இவர் 2019-ம் ஆண்டில் உற்பத்தியில் புதிய சகாப்தம் படைத்தார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இவர் இதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்ட ஈட்டனின் மின்சார துறை வணிகத்திற்கான தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் இருந்தார். 

இவர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பார்ச்சூனின் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக திகழ்ந்தார். அதற்கான பட்டியலிலும் அவர் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மற்றொரு இந்தியரான மனீஷ் பாப்னா இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார். 

இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மற்றும் மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் அரசியல், பொருளாதார வளர்ச்சியில் முதுகலைப்பட்டங்களையும் எம்.ஐ.டியில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.

நன்றி தமிழன்

Latest news

Buy Now Pay Later-இல் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்

தீங்கு விளைவிக்கும் கடன் ஒப்பந்தங்களால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டிருப்பதால், Buy Now Pay Later வழங்குநர்களுக்கு பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. ஜூன்...

Qatar Airways-உடன் இணைந்து வானில் பறக்க்கும் Virgin Australia

Qatar Airways-உடனான கூட்டாண்மை மூலம் நீண்ட தூர சந்தையில் மீண்டும் நுழைவதன் மூலம் Virgin Australia சர்வதேச அரங்கிற்குத் திரும்பத் தயாராகி வருகிறது. ஜூன் 12, 2025...

குயின்ஸ்லாந்தில் பிரபலமடைந்துவரும் Osteoporosis தடுப்பு உடற்பயிற்சி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பெரியவர்களிடையே எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் Osteoporosis-ஐ தடுப்பதை நோக்கமாகக் கொண்ட உடற்பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்து வருகின்றன. ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் குறைந்த எலும்பு...

குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக 4 நாட்களாக போராடும் பொதுமக்கள்

டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போது நான்காவது நாளாகத் தொடர்கின்றன. போராட்டக்காரர்களை அடக்க சுமார் 300 மத்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தைக்...

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற Greta Thunberg கைது

காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான Madleen-இல் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg கூறியுள்ளார்....

G7 மாநாட்டின் போது அல்பானீஸ் மற்றும் டிரம்ப் இடையே சந்திப்பை அமைக்க அழுத்தம்

இந்த வாரம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்று  கூட்டணித் தலைவர்கள் கூறுகின்றனர். உலகத் தலைவர்கள் கனடாவில் நடைபெறும் G7...