Newsஅமெரிக்காவில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக இந்தியர்கள் இருவர் நியமனம்

அமெரிக்காவில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக இந்தியர்கள் இருவர் நியமனம்

-

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். 

இவர்கள் அரசின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பல்வேறு அரசாங்க துறைகளில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்கினை வகித்து வருகின்றனர். 

இதுவரை 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அரசு நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது தனது நிர்வாகத்தில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக 14 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளார். 

இதில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒருவரது பெயர் ரேவதி அத்வைதி. மற்றொருவர் பெயர் மனீஷ் பாப்னா. இவர்களில் ரேவதி அத்வைதி பிளக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். 

எம்.பி.ஏ. படித்து உள்ள இவர் 2019-ம் ஆண்டில் உற்பத்தியில் புதிய சகாப்தம் படைத்தார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இவர் இதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்ட ஈட்டனின் மின்சார துறை வணிகத்திற்கான தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் இருந்தார். 

இவர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பார்ச்சூனின் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக திகழ்ந்தார். அதற்கான பட்டியலிலும் அவர் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மற்றொரு இந்தியரான மனீஷ் பாப்னா இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார். 

இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மற்றும் மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் அரசியல், பொருளாதார வளர்ச்சியில் முதுகலைப்பட்டங்களையும் எம்.ஐ.டியில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.

நன்றி தமிழன்

Latest news

ஒரு நாளைக்கு குப்பைக்கு செல்லும் ஒரு பில்லியன் உணவுகள்

உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பட்டினி கிடக்கும் வேளையில், மக்கள் ஒரு நாளைக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான உணவை வீணடிப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐக்கிய...

ஈஸ்டர் ஆராதனைக்கு சென்ற 45 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்த நிலையில் 8 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர்கள் பயணித்த பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து வடகிழக்கு...

சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நற்செய்தி

ஆஸ்திரேலிய ஒயின் மீதான வரிகளை நீக்க சீனா நகர்ந்து, பில்லியன் டாலர் ஏற்றுமதி சந்தையை மீண்டும் திறக்கிறது. பல ஆண்டுகளாக இந்த வரிகளால் தடைப்பட்டிருந்த $1.1 பில்லியன்...

பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும் ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் இருந்து எரிபொருளை வாங்கும் முன் விலையை இருமுறை சரிபார்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பெட்ரோல் நிலையங்களில் விலைகள் தவறாகக்...

பாதகமான நிலையில் உள்ள காப்பீடு செய்யப்படாத ஆஸ்திரேலியர்கள்

தனியார் மருத்துவக் காப்பீடு இல்லாத ஆஸ்திரேலியர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று சமீபத்திய கணக்கெடுப்பில்...

வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் நடத்திய ஆய்வின்படி, இளம் ஆஸ்திரேலியர்கள் மற்றும் குறைந்த...