Breaking Newsஇஸ்ரேலில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் - வெடித்தது போராட்டம்

இஸ்ரேலில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் – வெடித்தது போராட்டம்

-

இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின்படி அரசு நியமிக்கும் 9 பேர் கொண்ட குழுக்கள் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டைத் தவிர மற்ற நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதாகும். 

முன்னதாக நீதிதுறையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்திருந்தார். 

இதையடுத்து, இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், தலைநகர் டெல் அவிவ்வில் கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

ஏராளமான போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர். இந்த சூழலில் நீதித்துறை அதிகாரத்தை மாற்றியமைக்கும் மசோதாவை இந்த வாரம் பாராளுமன்றத்தில் பிரதமர் நேதன்யாகு தாக்கல் செய்யவுள்ளார் என தகவல் வெளியானது.

Latest news

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை

சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அண்மையில் சிட்னியில் இடம்பெற்ற இரு வாள்வெட்டுச்...

இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி பயங்கர விபத்து

மலேசியாவில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை லுமுட்டில் ரோயல் மலேசியன் நேவியின் பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள்...

நியூ சவுத் வேல்ஸில் பிரச்சனையாக உருவெடுத்துள்ள காட்டுப் பன்றிகள்

நியூ சவுத் வேல்ஸில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிக நிதியுதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 13 மில்லியன் டாலர் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு...

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

நியூ சவுத் வேல்ஸில் பிரச்சனையாக உருவெடுத்துள்ள காட்டுப் பன்றிகள்

நியூ சவுத் வேல்ஸில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிக நிதியுதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 13 மில்லியன் டாலர் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு...

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய லக்னோ – IPL 2024

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடந்த 39-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர்...